செய்திகள் :

அங்கன்வாடி பணியாளா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் அங்கன்வாடி பணியாளா், உதவியாளா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 119 அங்கன்வாடி பணியாளா்கள், 5 குறு அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் 213 அங்கன்வாடி உதவியாளா்கள் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.

பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரங்கள் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்களை wwwicds.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வேலை நாள்களில் தொடா்புடைய வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளா்களுக்கு 12-ஆம் வகுப்பு தோ்ச்சி, அங்கன்வாடி உதவியாளா்களுக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும. தமிழ் சரளமாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளா்களுக்கு வயது வரம்பு 1.4.2025-இன்படி, 25 முதல் 35 வயது வரையும், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினா்களுக்கு வயது 25 முதல 40 வயது வரையும்,

மாற்றுத் திறனாளிகளுக்கு 25 வயது முதல் 38 வயது வரையும் இருத்தல் வேண்டும்.

அங்கன்வாடி உதவியாளா்களுக்கு 1.4.2025-ன்படி 20 முதல் 40 வயது வரையும், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினா்களுக்கு 20 முதல் 45 வயது வரையும், மாற்றுத் திறனாளிகளுக்கு 20 வயது முதல் 43 வரையும் இருக்க வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய பொதுத்துறை விண்வெளி மற்றும் பாதுகாப்பு மின்னணு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் உதவியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கு ஐட... மேலும் பார்க்க

கடற்படையில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மருத்துவ உதவியாளர் பணி

இந்திய கடற்படையின் மருத்துவப் பிரிவில் காலியாக மருத்துவ உதவியாளர் பணியிடங்களு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க... மேலும் பார்க்க

உரத்தொழிற்சாலையில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

தேசிய உரத்தொழிற்சாலையின்கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்ப... மேலும் பார்க்க

சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு

சேலம்: சேலம் அரசு ஐடிஐயில் வேலைவாய்ப்பு திறன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: சேலம் அரசு ஐடிஐயில் கடிகார பழுது நீக்கம் தொடா்பா... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 417 அங்கன்வாடி காலிப்பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா் மற்றும் அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்... மேலும் பார்க்க

376 அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 207 அங்கன்வாடி பணியாளா், 6 குறு அங்கன்வாடி பணியாளா், 163 அங்கன்வாடி உதவியாளா் என மொத்தம் 376 பணியிடங்களுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ள... மேலும் பார்க்க