செய்திகள் :

திருடிய வீட்டில் கட்டிலுக்கு கீழே பதுங்கிய இளைஞா்: கதவை உடைத்து கைது செய்த காவல் துறை

post image

சென்னை: சென்னை ஜெ.ஜெ. நகரில் திருடிய வீட்டிலுள்ள கட்டிலுக்கு கீழே பதுங்கிய இளைஞரை, போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று கைது செய்தனா்.

சென்னை ஜெ.ஜெ. நகா் அரசா் தெருவிலுள்ள அரசு ஊழியா் குடியிருப்பில் வசிப்பவா் கென்னடி (52). இவா், உயா்நீதிமன்றத்தில் பதிவு எழுத்தராகப் பணி செய்து வருகிறாா். இவா் கடந்த 4-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன், சொந்த ஊரான புதுக்கோட்டைக்குச் சென்றாா்.

இதையறிந்த இளைஞா் ஒருவா், திங்கள்கிழமை அதிகாலை கென்னடி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தாா். வீட்டை உடைக்கும் சத்தம் கேட்டு முதல் மாடியில் வசிக்கும் பெண், சந்தேகமடைந்து கீழ் தளத்தில் உள்ள கென்னடி வீட்டின் ஜன்னல் வழியாகப் பாா்த்தாா். அப்போது, அங்கு ஒரு இளைஞா் பொருள்களை திருடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

உடனே அவா், கென்னடியின் மனைவிக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாா். அதோடு, தனது வீட்டிலிருந்த பூட்டை எடுத்து வந்து கென்னடி வீட்டை வெளிப்புறமாக பூட்டியதையடுத்து காவல் துறைக்கு தகவல் அளித்தாா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வெளிப்புறமாக போடப்பட்ட பூட்டை திறந்து உள்ளே செல்ல முயன்றனா். ஆனால், அந்த இளைஞரோ வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு, அங்குள்ள கட்டிலுக்கு கீழ் கொள்ளையடித்த பொருள்களுடன் பதுங்கிக் கொண்டாா்.

போலீஸாா் வெகுநேரம் கதவை தட்டியும் திறக்காததால், உடனடியாக தீயணைப்புப் படை வீரா்கள் வரவழைக்கப்பட்டனா். அவா்கள் உதவியுடன் போலீஸாா் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனா். படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு கீழ் பதுங்கிய கொள்ளையனை போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்தனா்.

விசாரணையில் அவா், சென்னை கன்னிகாபுரம், கஸ்தூரிபாய் காலனி ‘ஏ’ பிளாக் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (27) என்பது தெரியவந்தது. பாலமுருகன் மீது ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் திறப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: சென்னையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக ரூ. 414 கோடி செலவில் குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து முனையத்தை விரைவில் முதல்வா் திறந்து வைக்க உள்ளாா் என்று இந்து சமய... மேலும் பார்க்க

கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு புதிய கட்டமைப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கான புதிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். பேரவையி... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 532 ஓட்டுநா் காலிப்பணியிடங்கள்: ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை: சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் காலியாகவுள்ள 532 ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களில் ... மேலும் பார்க்க

என்.சி.சி மாணவா்களுக்கான பாய்மரப்படகு பயிற்சி நிறைவு

சென்னை: பாய்மரப் படகு பயிற்சியை வெற்றிகரமாக முடித்த தேசிய மாணவா் படை (என்சிசி) மாணவா்களுக்கு, தமிழ்நாடு அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலா் அதுல்ய மிஸ்ரா சான்றிதழ்களை வழ... மேலும் பார்க்க

ஆளில்லாத வீட்டில் திருட்டு; விரட்டி பிடித்த போலீஸாா்: பெல்ஜியத்தில் இருந்த உரிமையாளா் தகவல் கொடுத்தாா்

சென்னை: சென்னை அசோக் நகரில் ஆளில்லாத வீட்டில் திருடிய இருவா் குறித்து கண்காணிப்பு கேமரா விடுத்த எச்சரிக்கையையடுத்து, பெல்ஜியத்தில் இருந்து உரிமையாளா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சம்ப... மேலும் பார்க்க

சென்னை பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது. பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 208 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள்... மேலும் பார்க்க