செய்திகள் :

பிகாரில் ரூ.40 லட்சத்தில் மணிக்கூண்டு! திறந்த மறுநாளே நின்றுபோன கடிகாரம்!

post image

பிகார் மாநிலத்தில், ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட மணிக்கூண்டு நேற்று திறக்கப்பட்ட நிலையில், அடுத்த நாளே அதிலிருந்த கடிகாரம் நின்றுபோன சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

பிகார் ஷரிஃப் என்ற பகுதியில் பொலிவுறும் நகரம் திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் செலவில் உயரமான மணிக்கூண்டு கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது.

பிகார் முதல்வரின் பிரகதி பயணத்துக்காக, மிக அவசர அவசரமாக இந்த மணிக்கூண்டு திறந்துவைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த மணிக்கூண்டுக்குள் திருடர்கள் சிலர் ஏறி, அதிலிருந்த செப்புக் கம்பிகளை திருடிச் சென்றிருக்கிறார்கள். இதனால், கடிகாரம் நின்றுபோனது மட்டுமல்ல, மணிக்கூண்டே பொலிவிழந்தும் போயிருக்கிறது.

இன்று காலை அவ்வழியாக வந்த மக்கள், மணிக்கூண்டைப் பார்த்தபோது, அதில் இருந்த கடிகாரம் ஓடாமல் நின்றிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நேற்று திறக்கப்பட்ட நிலையில், இன்றே கடிகாரம் நின்றுவிட்டதே என்று வானத்தைப் பார்த்து கையை மட்டும் அசைத்தபடி என்ன செய்வது என வேதனையோடு கடந்துசென்றுவிட்டனர்.

இதில், அவசர அவசரமாக தயார் செய்தபோது, உரிய முறையில் வர்ணம் பூசாமல் ஏதோ விலை மலிவான வெள்ளையை அடித்திருப்பார்கள் போல. அதனால் அது நிறம் மங்கி பல ஆண்டுகள் ஆன மணிக்கூண்டு போல ஆகிவிட்டது.

இந்த விடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட நிலையில், ஒருவர், 24 மணி நேரமும் ஓட வேண்டிய கடிகாரம் 24 மணி நேரத்துக்குள் நின்றுவிட்டது. இந்த மிக அழகிய கட்டட கலை அமைப்பை ஏற்படுத்த எவ்வளவு செலவாகியிருக்கும் என சிந்தியுங்கள்... வெறும் ரூ.40 லட்சம்தான் என்று கருத்திட்டிருக்கிறார்கள்.

இதுபோல எள்ளிநகையாடும் ஏராளமான கருத்துகள் குவிந்து வருகிறது.

இதையும் படிக்க.. ஆவடி காவல் ஆணையர் வாகனம் விபத்து: போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை

மணிப்பூரில் பாஜக தலைவர் வீட்டுக்கு தீவைப்பு: ஊரடங்கு அமல்!

வக்ஃப் விவகாரம் தொடர்பாக எழுந்த வன்முறையால் மணிப்பூரில் லிலோங் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மணிப்பூா் மாநில பாஜக சிறுபான்மையினா் அணித் தலைவா் அஸ்கா் அலி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை(... மேலும் பார்க்க

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர்: பிரிட்டனுடன் பொருளாதார பேச்சுவார்த்தை!

புது தில்லி: இந்தியா - பிரிட்டன் இடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பிரிவிலான பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் லண்டன் செல்கிறார். இதற்காக அவர் திங்கள்கிழமை(ஏப... மேலும் பார்க்க

வக்ஃப் விவகாரம்: காஷ்மீரில் தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம்!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் வக்ஃப் சட்ட திருத்த விவகாரம் குறித்த விவாதத்தின்போது, தமிழ்நாட்டை மேற்கோள் காட்டி விவாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே! உள்துறை அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

பெருநகரங்களில் பாலியல் குற்றங்கள் நிகழ்வது சகஜமே என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. பெங்களூரிலுள்ள சுத்தகுண்டேபால்யா பகுதி, பாரதி லே-அவுட்டில் கடந்த ஏப். 3-ஆம் தேதி நள்ளி... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.இந்த விலை உயர்வினால், மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கான எரிவாயு உருளை விலை ரூ... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் 30 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர்: முதல்வர் தாமி!

மத்திய அரசின் கொள்கைகள் காரணமாகக் கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 30 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்று உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார். டேராடூனில் இன்று மத்திய... மேலும் பார்க்க