செய்திகள் :

தொடர்ச்சியாக 4 தோல்விகள்; சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் பயிற்சியாளர் கூறுவதென்ன?

post image

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ச்சியாக நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பேசியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான முதல் போட்டியில் அபார வெற்றியுடன் தொடங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது.

இதையும் படிக்க: இளம் வயதில் ஜெய்ஸ்வால் இப்படி முடிவெடுக்கலாமா? முன்னாள் இந்திய வீரர் கூறுவதென்ன?

முதல் போட்டிக்குப் பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சொதப்பி வருகின்றனர். குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியிலும் சன்ரைசர்ஸின் டாப் ஆர்டர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பயிற்சியாளர் கூறுவதென்ன?

பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் முன்னேற்றம் தேவைப்படுவதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 4 போட்டிகளாக சன்ரைசர்ஸ் அணி எவ்வாறு செயல்படுகிறது என்பது அணியில் உள்ள அனைவருக்கும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால், இதற்கு பிறகுதான் அணிக்கான உண்மையான சவாலே இருக்கிறது. தோல்விகளிலிருந்து மீண்டு தொடர்ச்சியாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இதையும் படிக்க: பாகிஸ்தான் அணி சரியாக செயல்படாததற்கு ஐபிஎல் தொடர் காரணமா? முன்னாள் கேப்டன் சொல்வதென்ன?

ஒவ்வொரு அணிக்கும் இதுபோன்ற தொடர்ச்சியான தோல்விகள் இருக்கும். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான அடுத்த போட்டிக்கு நமக்கு இன்னும் 5 நாள்கள் இடைவெளி இருக்கின்றன. நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட நாம் தயாராக வேண்டும் என்றார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வருகிற ஏப்ரல் 12 ஆம் தேதி அதன் அடுத்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

மெதுவாக பந்துவீசிய பாகிஸ்தான்: 3-வது போட்டிக்கும் அபராதம்!

முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான அணி நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஸ்லோ-ஓவர் ரேட்டில் மெதுவாக பந்துவீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.நியூசிலாந்து - ... மேலும் பார்க்க

ஐபிஎல்-லிருந்து எப்போது ஓய்வு? மனம் திறந்த எம்.எஸ்.தோனி!

ஐபிஎல்-லிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மனம் திறந்துள்ளார்.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் 5 முற... மேலும் பார்க்க

குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு 25% அபராதம்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.தெலங்கானாவில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் வ... மேலும் பார்க்க

ஐபிஎல்: நேற்று சென்னை.. இன்று ஹைதராபாத்! 4-ஆவது தோல்வி!

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் தொடரின் 19-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்ணயித்த 153 ரன்கள் வெற்றி இலக்கை குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 16.4 ... மேலும் பார்க்க

முகமது சிராஜ் அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 153 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ... மேலும் பார்க்க

சேப்பாக்கத்தில் சிஎஸ்கேவின் அடுத்த ஆட்டம் களைகட்டுமா? நாளை டிக்கெட் விற்பனை!

சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம். ஏ. சிதம்பரம் விளையாட்டுத் திடலில் அடுத்த வெள்ளிக்கிழமை(ஏப். 11) நடைபெறுகிறது.இந்த நிலை... மேலும் பார்க்க