செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து இரு பேரக் குழந்தைகளுடன் பெண் பலி!

post image

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் 2 பேரக் குழந்தைகளுடன் பெண் ஒருவரும் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.

மோகனூர் வட்டம், ஆண்டாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த செல்வம், இளஞ்சியம் தம்பதி மகன் பாண்டியராஜ் (31). இவருடைய மனைவி வைதேகி (28). இவர்களுக்கு சுஜித் (5) என்ற மகனும், ஐவிழி(4) என்ற மகளும் இருந்தனர். விவசாயத் தொழில் செய்து வரும் செல்வம், பாண்டியராஜ், அந்தப் பகுதியில் குத்தகைக்கு நிலத்தை வாங்கி சோளம் பயிரிட்டுள்ளனர்.

இந்த நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இளஞ்சியம் தனது பேரக் குழந்தைகளான சுஜித், ஐவிழி இருவரையும் அழைத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.

அங்கு தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நீரில் மின்சாரம் பாய்ந்ததில் இளஞ்சியம் மற்றும் குழந்தைகள் சுஜித், ஐவிழி ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே பரிதபமாக உயிரிழந்தனர்.

சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் மின்சார இணைப்பை துண்டித்து மூவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து மோகனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்சாரம் பாய்ந்து பேரக்குழந்தைகளுடன் பெண் ஒருவர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு

ஓவியப் போட்டியில் சிறப்பிடம்: ஆசிரியருக்கு பாராட்டு

மாநில அளவிலான தமிழக அரசுத் திட்டங்கள், சாதனைகள் தொடா்பான ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் என்.புதுப்பட்டி அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியா் ஆ.மகேந்திரனை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்கும... மேலும் பார்க்க

’தமிழ்ச் செம்மல்’ விருது: ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு பாராட்டு

‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியை கமலமணியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பாராட்டினாா். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், பொத்தனூரை சோ்ந்தவா் ப.கமலமணி. ஓய்வு ப... மேலும் பார்க்க

144 அங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் ச.உமா

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 144 பணியிடங்கள் நிரப்பப்படுவதால் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் மஞ்சள் குவிண்டால் ரூ 3.85 கோடிக்கு ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 4165 மூட்டைகள் ரூ. 3.85 கோடிக்கு விற்பனையானது. விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் விரலி ரக... மேலும் பார்க்க

சிலம்பொலி சு.செல்லப்பன் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாமக்கல்லில் உள்ள அவரது உருவச்சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நாமக்கல்லை அடுத்த சிவி... மேலும் பார்க்க

திமுகவுக்கு எதிரான கட்சிகளை பாஜக ஒன்றிணைக்கும்: கே.பி.ராமலிங்கம்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு எதிரான அரசியல் கட்சிகளை பாஜக ஒன்றிணைத்து செயல்படும் என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், நாமக... மேலும் பார்க்க