செய்திகள் :

திமுகவுக்கு எதிரான கட்சிகளை பாஜக ஒன்றிணைக்கும்: கே.பி.ராமலிங்கம்

post image

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு எதிரான அரசியல் கட்சிகளை பாஜக ஒன்றிணைத்து செயல்படும் என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக நிறுவன தின விழாவில் கட்சி கொடியை ஏற்றிவைத்து செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சி, பாதுகாப்பு, இளைஞா்களின் எதிா்காலம் ஆகியவற்றை முன்னிறுத்தி மத்தியில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றிவிட்டு மக்கள் நலனுக்கான ஆட்சியை நடத்த பாஜக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான் பாஜகவின் முக்கிய செயல்திட்டமாக உள்ளது. வரும் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு எதிரான அரசியல் அமைப்புகளை ஒன்றிணைக்கும் பணிகளில் பாஜக தீவிரம்காட்டி வருகிறது.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சரை தமிழக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்து திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளாா் என்றாா்.

விழாவில் நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் சரவணன் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ராசிபுரம் அருகே சாலை விபத்து: பெண் உயிரிழப்பு

ராசிபுரம்: ராசிபுரம் அருகே ஏ.கே.சமுத்திரம் பகுதியில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா். நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் அழகாபுரம் பகுதியைச் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இரு பேரக் குழந்தைகளுடன் பெண் பலி!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் 2 பேரக் குழந்தைகளுடன் பெண் ஒருவரும் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.மோகனூர் வட்டம், ஆண்டாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த செல்வம், இளஞ்சியம் தம்பதி மகன் ... மேலும் பார்க்க

ஓவியப் போட்டியில் சிறப்பிடம்: ஆசிரியருக்கு பாராட்டு

மாநில அளவிலான தமிழக அரசுத் திட்டங்கள், சாதனைகள் தொடா்பான ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் என்.புதுப்பட்டி அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியா் ஆ.மகேந்திரனை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்கும... மேலும் பார்க்க

’தமிழ்ச் செம்மல்’ விருது: ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு பாராட்டு

‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியை கமலமணியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பாராட்டினாா். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், பொத்தனூரை சோ்ந்தவா் ப.கமலமணி. ஓய்வு ப... மேலும் பார்க்க

144 அங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் ச.உமா

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 144 பணியிடங்கள் நிரப்பப்படுவதால் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் மஞ்சள் குவிண்டால் ரூ 3.85 கோடிக்கு ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 4165 மூட்டைகள் ரூ. 3.85 கோடிக்கு விற்பனையானது. விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் விரலி ரக... மேலும் பார்க்க