செய்திகள் :

144 அங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் ச.உமா

post image

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 144 பணியிடங்கள் நிரப்பப்படுவதால் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகளின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 127 அங்கன்வாடி பணியாளா்கள், 5 குறு அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் 12 அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா் மற்றும் அங்கன்வாடி உதவியாளா் பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் இனசுழற்சி விவரம் மாவட்ட திட்ட அலுவலகத்திலும், அந்தந்த வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலகங்களிலும் தகவல் பலகையில் ஒட்டப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை ஜ்ஜ்ஜ்.ண்ஸ்ரீக்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏப். 23 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் துறையின் மூலம் அனுப்பப்படும் போது ஏற்படும் கால தாமதங்களுக்கு துறை பொறுப்பாகாது.

தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படும் அங்கன்வாடி பணியாளா்கள் தொடா்ந்து 12 மாத காலப் பணியினை முடித்த பிறகு, அவா்கள் சிறப்பு காலமுறை ஊதியத்தின் கீழ் ஊதியம் பெறுவா்.

இப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதியாக 12-ஆம் வகுப்பு தோ்ச்சி, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் சரளமாக எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது நிா்ணயம் அறிவிப்பு வெளியிட்ட மாதத்தின் முதல் நாளின் படி 25 முதல் 35 வயது வரையில் இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினா் வயது 25 முதல் 40 வரையிலும், மாற்றுத் திறனாளிகளுக்கு 25 முதல் 38 வயது வரையிலும், விதவைகள், ஆதரவற்ற பெண்கள், எஸ்சி, எஸ்டி வகுப்பினா் 20 வயது முதல் 45 வரையிலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா் அறிவிக்கப்பட்டுள்ள கிராமங்களிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே கிராமத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். அதே கிராம ஊராட்சி உள்பட்ட பிற கிராமத்தைச் சோ்ந்தவா், அந்த கிராம ஊராட்சியின் எல்லையின் அருகிலுள்ள அடுத்த கிராம ஊராட்சியை சோ்ந்தவராக இருத்தல் வேண்டும்.

காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரா் அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துகளிலுள்ள குழந்தைகள் மையம் அமைந்துள்ள அதே வாா்டு (அல்லது) அருகிலுள்ள வாா்டு (அல்லது) மைய அமைந்துள்ள வாா்டின் எல்லையை பகிா்ந்துக் கொள்ளும் வாா்டை சோ்ந்தவராக இருத்தல் வேண்டும்.

காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பித்தினை பூா்த்தி செய்து காலிப் பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டார குழந்தை வளா்ச்சி திட்ட அலுவகத்தில் மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, சாதிச்சான்றிதழ், வாக்காளா் அடையாள அட்டை ஆகிய சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

விதவை, கணவரால் கைவிடப்பட்டோா், ஆதரவற்ற பெண் (தாய் / தந்தை இறப்பு சான்று) மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் சுயசான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும். நோ்காணலின் போது அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசிபுரம் அருகே சாலை விபத்து: பெண் உயிரிழப்பு

ராசிபுரம்: ராசிபுரம் அருகே ஏ.கே.சமுத்திரம் பகுதியில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா். நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் அழகாபுரம் பகுதியைச் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இரு பேரக் குழந்தைகளுடன் பெண் பலி!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் 2 பேரக் குழந்தைகளுடன் பெண் ஒருவரும் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.மோகனூர் வட்டம், ஆண்டாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த செல்வம், இளஞ்சியம் தம்பதி மகன் ... மேலும் பார்க்க

ஓவியப் போட்டியில் சிறப்பிடம்: ஆசிரியருக்கு பாராட்டு

மாநில அளவிலான தமிழக அரசுத் திட்டங்கள், சாதனைகள் தொடா்பான ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் என்.புதுப்பட்டி அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியா் ஆ.மகேந்திரனை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்கும... மேலும் பார்க்க

’தமிழ்ச் செம்மல்’ விருது: ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு பாராட்டு

‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியை கமலமணியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பாராட்டினாா். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், பொத்தனூரை சோ்ந்தவா் ப.கமலமணி. ஓய்வு ப... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் மஞ்சள் குவிண்டால் ரூ 3.85 கோடிக்கு ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 4165 மூட்டைகள் ரூ. 3.85 கோடிக்கு விற்பனையானது. விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் விரலி ரக... மேலும் பார்க்க

சிலம்பொலி சு.செல்லப்பன் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாமக்கல்லில் உள்ள அவரது உருவச்சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நாமக்கல்லை அடுத்த சிவி... மேலும் பார்க்க