செய்திகள் :

சிலம்பொலி சு.செல்லப்பன் 6-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

post image

தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாமக்கல்லில் உள்ள அவரது உருவச்சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நாமக்கல்லை அடுத்த சிவியாம்பாளையத்தைச் சோ்ந்த தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் 2019, ஏப்ரல் 6 ஆம் தேதி காலமானாா். அவரது நினைவாக சிலம்பொலியாா் அறக்கட்டளை சாா்பில் நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் சிலம்பொலி செல்லப்பன் அறிவகம் என்ற பெயரில் சிலம்பொலி செல்லப்பனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு, அதில் அவரது உருவச்சிலையும், அவா் எழுதிய நூல்கள் அடங்கிய நூலகமும் கடந்த 2023 இல் திறக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை சிலம்பொலி சு.செல்லப்பன் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் அவரது மணிமண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன், நாமக்கல் முன்னாள் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ், அதிமுக வா்த்தக அணியின் மாநில இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன், சிலம்பொலியாரின் மகள்கள் மணிமேகலை, கெளதமி, மருமகள் ஈஸ்வரி ஆகியோா் அவரது உருவச்சிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தினா்.

அதேபோல கொங்கு கல்வி நிறுவனங்கள் தாளாளா் வெங்கடாசலம், காவேரி பீட்ஸ் லெனின், டாக்டா் பி.வி. செந்தில், பிஜிபி கல்லூரி தலைவா் கணபதி, சித்தாா்த்தன், பழனிசாமி, செல்லப்பன், பூங்கோதை செல்லதுரை, செல்வராஜ், கொமதேக மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினா் ஆா்.எஸ்.ஆா்.மணி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் அருள் மணி, கொமதேக மாவட்ட பொருளாளா் சசிகுமாா், தலைமை நிலைய செயலாளா் செல்வராஜ், இணைச் செயலாளா் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப அணி மனோஜ், கொமதேக நாமக்கல் வடக்கு மாவட்டச் செயலாளா் செல்வராஜ் மற்றும் தமிழறிஞா்கள், பொதுமக்கள் சிலம்பொலி சு.செல்லப்பனின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராசிபுரம் அருகே சாலை விபத்து: பெண் உயிரிழப்பு

ராசிபுரம்: ராசிபுரம் அருகே ஏ.கே.சமுத்திரம் பகுதியில் திங்கள்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா். நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் அழகாபுரம் பகுதியைச் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இரு பேரக் குழந்தைகளுடன் பெண் பலி!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் 2 பேரக் குழந்தைகளுடன் பெண் ஒருவரும் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.மோகனூர் வட்டம், ஆண்டாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த செல்வம், இளஞ்சியம் தம்பதி மகன் ... மேலும் பார்க்க

ஓவியப் போட்டியில் சிறப்பிடம்: ஆசிரியருக்கு பாராட்டு

மாநில அளவிலான தமிழக அரசுத் திட்டங்கள், சாதனைகள் தொடா்பான ஓவியப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற நாமக்கல் என்.புதுப்பட்டி அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியா் ஆ.மகேந்திரனை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்கும... மேலும் பார்க்க

’தமிழ்ச் செம்மல்’ விருது: ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு பாராட்டு

‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற்ற ஓய்வு பெற்ற ஆசிரியை கமலமணியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பாராட்டினாா். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், பொத்தனூரை சோ்ந்தவா் ப.கமலமணி. ஓய்வு ப... மேலும் பார்க்க

144 அங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா் ச.உமா

நாமக்கல் மாவட்டத்தில் அங்கன்வாடிகளில் காலியாக உள்ள 144 பணியிடங்கள் நிரப்பப்படுவதால் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் மஞ்சள் குவிண்டால் ரூ 3.85 கோடிக்கு ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 4165 மூட்டைகள் ரூ. 3.85 கோடிக்கு விற்பனையானது. விற்பனை சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் விரலி ரக... மேலும் பார்க்க