செய்திகள் :

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை பொருளாதார சர்வாதிகாரத்தனம்! -சீனா கடும் விமர்சனம்

post image

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா கடும் எதிர்வினையாற்றியுள்ளது.

ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெந்த நாடுகளில் எந்தளவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதோ அதேபாணியில், அமெரிக்காவிலும் வெளிநாட்டு பொருள்கள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்கா மீது உலக நாடுகள் பதில் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன.

இதனால், கடும் பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்ள அமெரிக்கா தயாராகிவரும் சூழலில், அதிபா் டிரம்ப்பை கண்டித்து அந்த நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பிற நாட்டு பொருள்களுக்கு டிரம்ப் அறிவித்துள்ள வரிகள்:

  • சீனா - 34%

  • ஐரோப்பிய ஒன்றியம் - 20%

  • பிரிட்டன் - 10%

  • வியட்நாம் - 46%

  • தைவான் - 32%

  • ஜப்பான் - 24%

  • மலேசியா- 24%

  • தென் கொரியா- 25%

  • தாய்லாந்து - 36%

  • சுவிட்ஸர்லாந்து - 31%

  • இந்தோனேசியா - 32%

  • கம்போடியா- 49%

  • இலங்கை - 44%

  • பாகிஸ்தான் - 29%

இந்த நிலையில், சீன அரசு அமெரிக்காவின் நடவடிக்கைகளை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் இன்று(ஏப். 7) செய்தியாளர்களுடன் பேசுகையில்: “தங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய பிற நாடுகள் மீது வரி திணிப்பு மற்றும் பொருளாதார சர்வாதிகாரத்தனமான மனப்பான்மையுடன் பிற நாடுகளை மிரட்டும் தன்னிச்சையான நடவடிக்கை இது” என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

சீன பொருள்கள் மீது டிரம்ப் அறிவித்துள்ள 34 சதவீத பரஸ்பர வரி விதிப்புக்கு பதிலடியாக, அமெரிக்காவின் அனைத்து பொருள்கள் மீதும் 34 சதவீத கூடுதல் வரி விதிப்பை சீனா தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடல்நிலை தேறிய பின் முதல்முறையாக மக்களைச் சந்தித்தார் போப் பிரான்சிஸ்!

ரோம்: உடல்நிலை தேறிய பின் பொதுவெளியில் முதல்முறையாக போப் பிரான்சிஸ் மக்களை சந்தித்தார்.நிமோனியாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ்(88) கடந்த மார்ச் 23-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வாடி... மேலும் பார்க்க

ஜப்பானில் மருத்துவப் போக்குவரத்து ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து!

ஜப்பானில் மருத்துவ உதவிக்குப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். நாகாசாகி விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகா பகுதிக்கு நோயாளி ஒருவரை ஏற்றிச்சென்ற மர... மேலும் பார்க்க

அணுசக்தி ஒப்பந்தம் மிரட்டும் அமெரிக்கா: என்ன செய்யும் ஈரான்?

-சந்தோஷ் துரைராஜ்-அணு ஆயுதங்கள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் முன்னெப்போதும் பாா்த்திராத வகையில், ஈரான் மீது குண்டு வீசப்படும் என்றும், ஈரானுடன் வா... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: இந்தியா கூடுதல் நிவாரண உதவி!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மா் நாட்டுக்கு சி-17 விமானம் மூலம் கூடுதலாக 31 டன்கள் நிவாரண பொருள்களை இந்தியா ஞாயிற்றுக்கிழமை அனுப்பியது. உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாதில் உள்ள ஹிண்டன் விமான தளத்... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: 15 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா். காஸாவில் போா் புரிந்து வரும் ஹமாஸ் அமைப்பு உடனான போா் நிறுத்த ஒப்பந்தத்தை கடந்த மாதம் முறித்த இஸ்ரேல், காஸாவில் வான் மற்றும் தரைவழித் தாக்க... மேலும் பார்க்க

பண முறைகேடு குற்றச்சாட்டு: இந்திய வம்சாவளி அமெரிக்க நீதிபதி கைது!

அமெரிக்காவில் பண முறைகேடு குற்றச்சாட்டு தொடா்பாக இந்திய வம்சாவளி நீதிபதி கே.பி.ஜாா்ஜ் கைது செய்யப்பட்டாா். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோா்ட் பெண்ட் மாவட்ட நீதிபதியாக 2018-ஆம் ஆண்டுமுதல் ... மேலும் பார்க்க