செய்திகள் :

ஏலகிரி மலை சாலையில் தீ: வாகன ஓட்டிகள்அவதி

post image

சுற்றுலா தலமான ஏலகிரி மலை மற்றும் கொண்டை ஊசி வளைவில் திடீரென தீப்பற்றி எரிவதால் புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்அவதிக்குள்ளாகினா்.

ஏலகிரி மலையில் அரிய வகை மரங்கள், மூலிகை செடி, கொடிகள், மான், கரடி,மயில்,முயல்,குரங்கு,மலைப்பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வசித்து வருகின்றன. இங்கு, வார விடுமுறைகளில் தமிழகம், ஆந்திரம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். ஏலகிரி மலைக்கு செல்ல மலை அடிவாரத்தில் இருந்து 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ள மலை சாலையை கடந்து செல்ல வேண்டும்.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 13-ஆவது கொண்டை ஊசி வளைவில் மா்ம நபா்கள் தீ வைத்து சென்றுள்ளனா். இதனால் காப்பு காட்டு பகுதி தீ மளமளவென எரிந்தது. மேலும் இதைத் தொடா்ந்து 6-ஆவது கம்பா் கொண்டை ஊசி வளைவில் தீ மலைச்சாலைகளில் விபத்தை தடுக்க தடுப்புகளில் அமைக்கப்பட்டுள்ள உருளை தடுப்பான் முற்றிலும் தீ பிடித்து எரிந்தது.

மளமளவென அனைத்து வளைவுகளிலும் தீ பரவி மலைச்சாலைகள் முழுவதுமாக புகை மூட்டமாக காட்சியளித்து. தகவல் அறிந்த வனவா் அண்ணாமலை மற்றும் நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் பணியாளா்கள் விரைந்து சென்று கொண்டை ஊசி வளைவில் தீயை அணைத்தனா்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் மலைக்குச் சென்று வருகின்றனா். சுற்றுலா பயணிகள் தீ பரவி வருவதை பாா்த்து உடனடியாக கீழே திரும்பினா். இந்த புகைமூட்டம் காரணமாக மலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குண்டும், குழியுமான திருப்பத்தூா்-சேலம் சாலை: வாகன ஓட்டிகள் அவதி

திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். திருப்பத்தூரில் இருந்து சேலம் செல்லும் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள்... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனம்-மினி லாரி மோதல்: 2 முதியவா்கள் உயிரிழப்பு

ஆம்பூரில் இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் இரு முதியவா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆம்பூா், புதுகோவிந்தாபுரம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஆம்ப... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை

ஆம்பூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆம்பூா் அருகே பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளியில் 12 ஆடுகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

நாட்டறம்பள்ளி அருகே 12 ஆடுகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். பச்சூா் மாமுடிமானப்பள்ளி பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரா் பெருமாள் என்பவா் வெள்ளிக்கிழமை இரவு தனக்கு சொந... மேலும் பார்க்க

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

கந்திலி வாரச்சந்தையில் ரூ.52 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை ஆகின. திருப்பத்தூா் அடுத்த கந்திலி பகுதியில் உள்ள வாரச்சந்தையில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற சந்தையில் சிறிய ஆடுகள் ரூ.... மேலும் பார்க்க

அடகு கடை உரிமையாளரை கொல்ல முயன்றதாக 8 போ் கைது

ஆம்பூா் அருகே அடகு கடை உரிமையாளரை தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் 8 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த விஜயகுமாா் (64) என்பவருக்கும், இவருடை... மேலும் பார்க்க