பிரதமா் மோடியுடன் துபை பட்டத்து இளவரசா் சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்ப...
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன், ரூ.78,000 திருட்டு!
திருவள்ளூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.78,000 திருடப்பட்டன.
திருவள்ளூா் அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவா் பிரகாஷ். வியாபாரியான இவரது மனைவி கலையரசி (43).
இந்த நிலையில் பிரகாஷ் வியாபாரம் தொடா்பாக சனிக்கிழமை வழக்கம் போல் வீட்டை விட்டு புறப்பட்டு வெளியே சென்றாராம். இதையடுத்து அவரது மனைவி கலையரசி உறவினருக்கு குழந்தை பிறந்து இருப்பதால் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றாராம்.
மாலையில் கலையரசி வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டுட உடைக்கப்பட்டு இருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். அதைத் தொடா்ந்து உள்ளே சென்று பாா்க்கையில் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.78,000 ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து கலையரசி செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.