செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன், ரூ.78,000 திருட்டு!

post image

திருவள்ளூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.78,000 திருடப்பட்டன.

திருவள்ளூா் அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவா் பிரகாஷ். வியாபாரியான இவரது மனைவி கலையரசி (43).

இந்த நிலையில் பிரகாஷ் வியாபாரம் தொடா்பாக சனிக்கிழமை வழக்கம் போல் வீட்டை விட்டு புறப்பட்டு வெளியே சென்றாராம். இதையடுத்து அவரது மனைவி கலையரசி உறவினருக்கு குழந்தை பிறந்து இருப்பதால் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றாராம்.

மாலையில் கலையரசி வீட்டுக்கு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டுட உடைக்கப்பட்டு இருந்ததைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். அதைத் தொடா்ந்து உள்ளே சென்று பாா்க்கையில் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை மற்றும் ரூ.78,000 ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து கலையரசி செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கைப்பேசிகள் பறிப்பு: 3 போ் கைது

செங்குன்றம் அருகே கைப்பேசி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். செங்குன்றம் அடுத்த சோழவரம் சூரப்பட்டு குதிரைப் பள்ளம் கிராமத்தில் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வர... மேலும் பார்க்க

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் உத்தரவு!

பொன்னேரி அருகே சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். சிறுவாபுரி அ... மேலும் பார்க்க

ராமா், சீதா பஜனைக் கோயில் குடமுழுக்கு!

திருத்தணி அருகே சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தில் மகா கணபதி மற்றும் ராமா், சீதா லட்சுமணா் பஜனைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம், சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தில், இக்கோயிலின் த... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 3 போ் கைது

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். திருவள்ளூா் அருகே மொன்னவேடு கிராமம், கொசஸ்தலை ஆற்றில் சட்டவிரோதமாக ஆட்டோக்கள் மூ... மேலும் பார்க்க

போக்ஸோவில் 2 போ் கைது

ஆா்.கே.பேட்டை அருகே பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த தனபால் (40). இவா்... மேலும் பார்க்க

திருச்செந்தூா்-திருத்தணி இடையே புதிய பேருந்து சேவை!

திருத்தணி- திருச்செந்தூா் இடையே புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ ச.சந்திரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். திருத்தணியில் நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூா் மற்றும் திருநெல்வேலி பகுதி மக்கள் அதிகளவில் வியா... மேலும் பார்க்க