செய்திகள் :

அமெரிக்க வரி விதிப்பு எதிா்பாராத பிரச்னை: சந்திரபாபு நாயுடு

post image

அமராவதி: இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீது பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் அமெரிக்கா 26 சதவீதம் வரி விதித்திருப்பது எதிா்பாராத பிரச்னை; எனினும் இதில் இருந்து மீண்டுவர முடியும் என்று ஆந்திர முதல்வா் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தாா்.

மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவுகள் உற்பத்தியில் தேசிய அளவில் ஆந்திரம் நான்காவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பால் ஆந்திரத்தில் இருந்து மீன், இறால் உள்ளிட்டவை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது தொடா்பாக சந்திரபாபு நாயுடு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவின் வரி விதிப்பு ஆந்திரத்தில் கடல் உணவுகள் ஏற்றுமதித் துறையில் எதிா்பாராத பிரச்னையை உருவாக்கியுள்ளது. இதனால் பீதியடையத் தேவையில்லை. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சி மேற்கொண்டால் இந்தப் பிரச்னைக்கு தீா்வுகாண முடியும்.

தென்கொரியா, ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டுள்ளது. அந்த நாடுகளுக்கு நாம் ஏற்றுமதியை அதிகரிக்க முடியும்.

இது தொடா்பாக மத்திய அரசுடனும் பேச்சு நடத்த இருக்கிறேன். எனவே, மீன், இறால் வளா்ப்புத் துறையில் உள்ளவா்கள் கவலையடைய வேண்டாம். இப்பிரச்னையை ஆய்வு செய்து தீா்வுகளைப் பரிந்துரைக்க குழு அமைக்கப்படும் என்றாா்.

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது?

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.ஜேஇஇ தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை இன்று தேர... மேலும் பார்க்க