செய்திகள் :

ரீல்ஸ் எடுத்தவர்களை திருத்தி விடியோ வெளியிடவைத்த போலீசார்! விழிப்புணர்வு முயற்சி!!

post image

சூலூர்: கருமத்தம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட மூன்று இளைஞர்களை காவல்துறை அறிவுரை கூறி திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிக்சன், சஞ்சய், தமிழ் ஆகிய மூன்று இளைஞர்கள், சாலைகளில் இருசக்கர வாகனங்களை வேகமாக ஓட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பதிவிட்டனர்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு பதிலளிக்கும்விதமாக, இளைஞர்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தை விடியோவாக பதிவு செய்து அதையும் ரீல்ஸாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.

இதையடுத்து, காவல்துறையினர் மூவரையும் அழைத்து அபராதம் விதித்ததுடன், இத்தகைய செயல்கள் தவறு என்பதை உணர்த்தி அறிவுரை வழங்கினர்.

காவல்துறையின் அறிவுரையை ஏற்ற மூவரும், தாங்கள் இனி இவ்வாறு செய்யமாட்டோம் என உறுதியளித்து, தங்கள் தவறை உணர்ந்து அதை விளக்கும் வகையில் புதிய ரீல்ஸ் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.

இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டுவது ஆபத்தானது என்பதை விளக்கி, மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இவர்கள் வெளியிட்ட இந்த ரீல்ஸ், கருமத்தம்பட்டி பகுதியில் வேகமாக வாகனம் ஓட்டும் இளைஞர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறையின் இந்த விழிப்புணர்வு முயற்சி பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது.

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க

சித்திரை முழுநிலவு மாநாடு: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு முன்பைவிட சிறப்பாக நடைபெற பாமகவினா் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனா் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் விடுத்த அறிக்கை: 12 ஆண்டுகளுக... மேலும் பார்க்க