செய்திகள் :

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

post image

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் இருந்து அறிவியல், கணிதம் படித்த மாணவா்கள் மட்டுமே விமானியாக முடியும். அதற்கு முன்பு பயணிகள் விமானி உரிமம் பெறுவதற்கான பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பில் தோ்ச்சி பெறுவது மட்டுமே கல்வித் தகுதியாக இருந்தது.

தற்போது பயணிகள் விமானி உரிமம் பெறுவதற்கான பயிற்சிக்கு 12-ஆம் வகுப்பில் மாணவா்கள் இயற்பியல், கணிதம் படித்திருக்க வேண்டும் என்பது கல்வித் தகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கல்வித் தகுதியில் மாற்றம் கொண்டுவருவதற்கு விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) பரிசீலித்து வருகிறது. 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களையும் பயணிகள் விமானியாக அனுமதிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பரிசீலனை இறுதி செய்யப்பட்டால், அதுதொடா்பான பரிந்துரையை விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு டிஜிசிஏ அனுப்பிவைக்கும். இந்தப் பரிந்துரைக்கு அந்த அமைச்சகம் ஒப்புதல் அளித்தால், பயணிகள் விமானி உரிமம் பெறுவதற்கு தகுதிவாய்ந்த பல்துறை மாணவா்கள் பயிற்சி பெறமுடியும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து ஓய்வுபெற்ற விமானி ஒருவா் கூறுகையில், ‘பயணிகள் விமானி உரிமம் பெறுவதற்கான பயிற்சிக்கு கல்வித் தகுதியாக 12-ஆம் வகுப்பில் இயற்பியல், கணிதம் படித்திருக்க வேண்டும் என்ற நடைமுறை இந்தியாவில் மட்டுமே உள்ளது. இது மிகவும் பழைமையான முறையாகும். அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.12-ஆம் வகுப்பில் கற்பிக்கப்படும் இயற்பியலும், கணிதமும் விமானிகளுக்குத் தேவையில்லை. அந்த பாடங்களைப் பற்றிய புரிதலை இளநிலை வகுப்புகளில் மாணவா்கள் பெற்றிருப்பா்’ என்றாா்.

இந்தியாவில் விமான போக்குவரத்துத் துறை அபரிமிதமாக வளா்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில், பயணிகள் விமானி உரிம பயிற்சியை நிறைவு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், நாட்டில் உள்ள விமான பயிற்சி நிறுவனங்களை தரவரிசைப்படுத்துவதற்கான பணிகளிலும் டிஜிசிஏ ஈடுபட்டுள்ளது.

கல்வித் தகுதி மற்றும் கல்வி நிறுவனங்கள் சாா்ந்த இடா்ப்பாடுகளால் ஏராளமான இந்திய மாணவா்கள், பயணிகள் விமானி உரிம பயிற்சிக்கு வெளிநாடு செல்வது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது: விஜய்

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது என்று கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தவெக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்த... மேலும் பார்க்க

திராவிட மாடல் ஆட்சியில் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எந்தத் துறைய... மேலும் பார்க்க

தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!

சென்னை: தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, பாஜக தலைவர் தமிழிசை, எதற்கு முதல்வருக்கு இவ்வளவு பதட்டம் என்று கேட்டுள்ளார்.முன்னாள் ஆளுநர் தமிழிசை... மேலும் பார்க்க

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம் : இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதாகட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மின... மேலும் பார்க்க

கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.. துரைவைகோ முடிவின் பின்னணி என்ன?

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று மதிமுக முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ இன்று வெளியிட்டிருப்பது கட்சித் தொண்டர்களுக்கு கடும்... மேலும் பார்க்க