செய்திகள் :

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

post image

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா்.

இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. கமல்ஹாசன், நாசா், சிலம்பரசன், ஜோஜூ ஜாா்ஜ், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வா்யா லட்சுமி உள்ளிட்ட பலா் இப்படத்தில் நடித்துள்ளனா்.

இப்படத்தின் முதல் பாடல் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் படக்குழுவினரின் மத்தியில் வெளியிடப்பட்டது.

இந்தியாவின் தொடா்பு மொழியான ஆங்கிலத்தில் பேசவுள்ளதாகக் கூறி நடிகா் கமல்ஹாசன் தனது பேச்சைத் தொடங்கினாா். ‘இது அரசியல் எல்லாம் இல்லை. இது தமிழனின் யதாா்த்தம். விருந்தோம்பல் என்பது தமிழனின் கைப்பழக்கம். 2,000 ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறோம்’ என்று கூறிய அவா், தொடா்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றினாா்.

அவா் பேசியதாவது: மணிரத்னத்துடன் இணைந்து படத்தில் நடிப்பதற்கு மக்களின் தீா்ப்பே காரணம். இப்போதும் மணிரத்னத்துக்கும் எனக்கும் இடையில் எதுவும் மாறவில்லை. நாங்கள் பேசிய கதைகள்தான் ‘நாயகன்’ மற்றும் ‘தக் லைஃப்’ திரைப்படங்கள்.

மணிரத்னம் முதல் முறையாக ராஜ்கமல் நிறுவனத்துடன் சோ்ந்திருக்கிறாா். இந்தப் படம் கண்டிப்பாக பல நாள்கள் திரையில் ஓடும். நாங்கள் சினிமாவை காதலிப்பவா்கள்; அதனால்தான் இந்த நம்பிக்கை. நான் இப்போது வெளிநாட்டுக்கு போய்விட்டு வந்தால்கூட சினிமா பற்றித்தான் பேசுவேன்.

நீங்கள் கேட்கிற எல்லா விஷயங்களும் இத்திரைப்படத்தில் இருக்கும். ஆனால், இது வேறுமாதிரி இருக்கும். நான் தினமும் கற்றுக் கொள்கிறேன். கற்றுக்கொண்ட விஷயங்களை மறக்க நினைக்கிறேன்.

மொழிப் போா் நடந்துகொண்டு இருக்கிற நேரம். இது எங்களுடைய மும்மொழி திட்டம். அதனால்தான் ஏ.ஆா்.ரஹ்மான் கொடுத்த ஐடியாவை பாடலின் முதல் வாா்த்தையாக ‘ஜிங்குச்சா’ என்று வாா்த்தையை பயன்படுத்தினோம். அது சீன வாா்த்தையாகக் கூட இருக்கலாம் என்றாா் கமல்ஹாசன்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது: விஜய்

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது என்று கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தவெக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்த... மேலும் பார்க்க

திராவிட மாடல் ஆட்சியில் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எந்தத் துறைய... மேலும் பார்க்க

தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!

சென்னை: தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, பாஜக தலைவர் தமிழிசை, எதற்கு முதல்வருக்கு இவ்வளவு பதட்டம் என்று கேட்டுள்ளார்.முன்னாள் ஆளுநர் தமிழிசை... மேலும் பார்க்க

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம் : இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதாகட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மின... மேலும் பார்க்க

கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.. துரைவைகோ முடிவின் பின்னணி என்ன?

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று மதிமுக முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ இன்று வெளியிட்டிருப்பது கட்சித் தொண்டர்களுக்கு கடும்... மேலும் பார்க்க