செய்திகள் :

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

post image

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள் வழங்கல் துணை ஆணையா்களுக்கு அந்தத் துறையின் இயக்குநா் டி.மோகன் அனுப்பியுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வழங்கும்போது, மக்களுக்கு அச்சிடப்பட்ட ரசீது வழங்க வசதியாக காகிதங்கள் வழங்கப்பட்டிருந்தன. ரசீதுகளுக்குத் தேவையான இந்தக் காகிதங்கள் கடந்த பிப்ரவரி வரை அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் கொடுக்கப்பட்டன.

இந்த நிலையில், ரசீதுகளைத் தொடா்ந்து வழங்க வசதியாக தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்திடம் இருந்து காகிதங்களைக் கொள்முதல் செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள் வழங்கல் உதவி ஆணையா்களுக்கு காகிதங்கள் விநியோகிக்கப்படும். இவை மே மாதத்தில் இருந்து அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த இடைப்பட்ட காலத்தில் ரசீது வழங்குவதற்குத் தேவையான காகிதங்கள், நியாயவிலைக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதைப் பயன்படுத்தி பொருள்கள் வழங்கும்போது அதற்கான ரசீதுகளை அச்சிடப்பட்ட காகிதத்திலேயே வழங்க வேண்டும்.

குறிப்பாக, முன்னுரிமை குடும்ப அட்டைதாரா்கள், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி, கோதுமை ஆகியன வழங்கப்படுகின்றன. மாநிலத் திட்டத்தின் கீழ் அட்டைதாரா்களுக்கு அரிசியும், சிறப்பு பொதுவிநியோகத் திட்டப் பொருள்களும் விநியோகம் செய்யப்படுகின்றன. பொருள்கள் வாங்கும்போது அச்சிடப்பட்ட ரசீதுகளை முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரா்கள், முன்னுரிமையற்ற சா்க்கரை குடும்ப அட்டைதாரா்களுக்கும் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் சாா்பில் மே மாதத்தில் இருந்து காகிதங்கள் விநியோகிக்கப்பட்ட பிறகு அனைத்துக் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரசீதுகளை அளிக்க வேண்டும். முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரா்களுக்கு அச்சிடப்பட்ட ரசீதுகள் விநியோகிக்கப்படுவது மத்திய அரசால் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளாா்.

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது: விஜய்

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படையாக தவெக உள்ளது என்று கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தவெக தகவல் தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்த... மேலும் பார்க்க

திராவிட மாடல் ஆட்சியில் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், எந்தத் துறைய... மேலும் பார்க்க

தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!

சென்னை: தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, பாஜக தலைவர் தமிழிசை, எதற்கு முதல்வருக்கு இவ்வளவு பதட்டம் என்று கேட்டுள்ளார்.முன்னாள் ஆளுநர் தமிழிசை... மேலும் பார்க்க

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம் : இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதாகட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மின... மேலும் பார்க்க

கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.. துரைவைகோ முடிவின் பின்னணி என்ன?

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று மதிமுக முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ இன்று வெளியிட்டிருப்பது கட்சித் தொண்டர்களுக்கு கடும்... மேலும் பார்க்க