செய்திகள் :

Meerut Murder: பாம்புக் கடியில் இறந்தாரா கணவர்? மனைவி கைது; விசாரணையில் சிக்கியது எப்படி?

post image

மீரட்டை சேர்ந்த அமித் (25) என்பவர் இரவில் உறங்கச் சென்றவர் காலையில் பாம்பு கடித்து இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் பாம்பு கடித்து இறந்ததாகவே போலீஸாரும் கருதினர்.

மீரட் அருகில் உள்ள அக்பர்பூர் என்ற கிராமத்தில் நடந்த இச்சம்பவத்தில் உயிரிழந்த அமித் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

பிரேதப் பரிசோதனையில் அமித் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து அமித் மனைவி ரவிதாவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர்தான் தனது காதலன் அமர்தீப் என்பவருடன் சேர்ந்து இக்கொலையைச் செய்திருப்பது தெரிய வந்தது.

அமித்
அமித்

இது குறித்து மீரட் போலீஸ் அதிகாரி ராகேஷ் குமார் மிஸ்ரா கூறுகையில், ''ரவிதா தனது கணவரின் நண்பர் அமர்தீப் என்பவருடன் திருமணம் தாண்டிய உறவிலிருந்துள்ளார். இது குறித்து அமித்திற்குத் தெரிய வந்தது.

உடனே அமித் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். இதையடுத்து பிரச்னைக்குத் தீர்வு காணத் தனது கணவரைக் கொலை செய்ய ரவிதா தனது காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.

கொலை செய்ய வேண்டும். ஆனால் அக்கொலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்று இருவரும் நினைத்தனர். இதற்காக 1,000 ரூபாய் கொடுத்து பாம்பு வாங்கினர்.

ஆனால், இரவில் அமித்தைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பாம்பை விட்டுக் கடிக்க விட்டுள்ளனர். அமித் உடம்பில் 10 இடங்களில் பாம்புக் கடி காயம் இருந்தது.

கடித்த பாம்பு அமித் உடம்புக்குக் கீழே மறைந்திருந்தது. ரவிதாவும், அமர்தீப்பும் கைது செய்யப்பட்டுள்ளார்'' என்றார்.

பாம்பு கடிக்கும் முன்பே அமித் கொலை செய்யப்பட்டு இருந்ததால் பாம்பின் விஷம் உடம்பு முழுவதும் பரவாமல் இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு படிக்கும் சகோதரிகள் இருவர் பள்ளிக்கு வந்த நிலையில் மயங்கி உள்ளனர். இருவரையும் ஆசிரியர்கள் அதே பகுதியிலுள்ள அ... மேலும் பார்க்க

மொட்டைமாடியில் கஞ்சா வளர்த்த மத்திய அரசு அதிகாரி; தென்னையில் கள் இறக்கும் தொழிலாளியால் சிக்கினார்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலகத்தில் அஸிஸ்டெண்ட் ஆடிட் ஆப்பிசராக ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெதின்(27) என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர் திருவனந்தபுரம் கம்லேஸ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; மருமகனைப் பாறாங்கல்லால் தாக்கி கொன்ற மாமனார்; என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர்- கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மூத்த மகள் சங்கீதா. இவருக்கும் நாசரேத் கீழத்தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்குப் பின் மீட்பு

கடந்த 6-ஆம் தேதியன்று கடத்தப்பட்ட பிரபல தொழிலதிபர் சுந்தரராமன் மதுரை காவல்துறையினரால் நேற்று மீட்கப்பட்டார். இந்த கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகைது செய்ய... மேலும் பார்க்க

31 வருடங்களுக்குப் பிறகு தூசுதட்டப்பட்ட வழக்கு; 32 வயது இளைஞன் 63 வயதில் AI மூலம் சிக்கியது எப்படி?

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1994-ம் ஆண்டு கொலை வழக்கொன்று பதிவானது. அந்த வழக்கில் இரண்டுப் பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இர... மேலும் பார்க்க

சென்னை: ரூ.17 லட்சம், 4 செல்போன்கள் - மாப்பிள்ளை என அழைத்து ஏமாற்றிய மணமகளின் அப்பா!

சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (31). இவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜெயபிரகாஷ், மணமகள் தேவை என் திருமண தக... மேலும் பார்க்க