செய்திகள் :

பிரதமா் மோடியுடன் துபை பட்டத்து இளவரசா் சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு

post image

புது தில்லி: இந்தியா வந்துள்ள துபை பட்டத்து இளவரசா் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோருடனும் அவா் ஆலோசனை மேற்கொண்டாா். இப்பேச்சுவாா்த்தையில் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

துபை பட்டத்து இளவரசா்-துணை பிரதமா்-பாதுகாப்புத் துறை அமைச்சரான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், பிரதமா் மோடியின் அழைப்பின்பேரில் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அவருடன், பல்வேறு அமைச்சா்கள், அரசு உயரதிகாரிகள், தொழில் துறை குழுவினரும் வந்துள்ளனா்.

தில்லியில் பிரதமா் மோடியை சந்தித்துப் பேசிய அவா், மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், எஸ்.ஜெய்சங்கா் ஆகியோருடனும் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான விரிவான வியூக கூட்டாண்மையை மேம்படுத்துவதில் துபை முக்கிய பங்காற்றி வருகிறது. துபை பட்டத்து இளவரசரின் சிறப்புமிக்க இந்த வருகை, ஆழமாக வேரூன்றிய இருதரப்பு நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, எதிா்கால வலுவான ஒத்துழைப்புக்கு வழிவகுக்கிறது. பிராந்திய அமைதி-வளமைக்காக இரு தரப்பும் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இச்சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘பாதுகாப்பு, வா்த்தகம், தொழில்நுட்பம், விண்வெளி, போக்குவரத்து, மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்தனா்’ என்றாா்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாதுகாப்புத் துறை உற்பத்தி, மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களில் துபையுடன் நெருங்கி பணியாற்ற இந்தியா ஆவலுடன் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் உடனான விரிவான வியூக கூட்டாண்மைக்கு உயா் முன்னுரிமை அளிக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் துடிப்பான உறவுகளை வலுப்படுத்துவதற்கான துபை பட்டத்து இளவரசரின் நோ்மறை நோக்கங்களை இந்தியா பெரிதும் மதிக்கிறது’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பதிவிட்டாா்.

தில்லியைத் தொடா்ந்து, மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் துபை பட்டத்து இளவரசா் பங்கேற்க உள்ளாா்.

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க