செய்திகள் :

தமிழகத்தில் எச்ஐவி பாதிப்பு அதிகரிப்பா? தடுப்பது எப்படி?

post image

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 25,000 பேருக்கு எச்ஐவி தொற்று பாதித்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, எச்ஐவி பாதிக்கப்பட்டவர்கள் குறித்து கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ண முரளி கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, அவருக்கு பதிலளிக்கும்விதமாக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, ``தமிழகத்தில் 1,57,908 பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் மட்டும் 25,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

மேலும், எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையால் சிறப்பு ஓய்வூதியத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும், மாறாக, பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்காக உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

உலகளவில் பேசப்படும் நோய்ப்பாதிப்புகளில் ஒன்றாக எச்ஐவி பாதிப்பு உள்ளது. இதற்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை எனினும், சர்க்கரை நோய் போன்று, நாள்தோறும் மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நாள்களைத் தள்ளிப் போடலாம் என்று கூறுகின்றனர். மருந்துகளின் மூலம், ரத்தத்தில் இருக்கும் கிருமிகளின் எண்ணிக்கையைக் குறைத்தோ இல்லாமலோகூட செய்து விடலாம். மருந்துகளை எடுக்காமல் இருந்தால், உயிரிழப்புக்கான வாய்ப்புகள் அதிகம்.

மேலும், பெரும்பாலானோர் எச்ஐவியும் எய்ட்ஸும் ஒன்றுதான் என்று கருதுகின்றனர். ஆனால், எச்ஐவி வேறு; எய்ட்ஸ் வேறு. நோய் எதிப்பு மண்டலத்தின் வலிமையைக் குறைப்பதுதான் எச்ஐவி எனும் வைரஸ். எச்ஐவி தொற்றின் அதீத நிலையாக எய்ட்ஸ் நோயைக் கொள்ளலாம். எச்ஐவி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எய்ட்ஸ் ஏற்படாது. முறையான சிகிச்சை அல்லாதோருக்கும், எச்ஐவியின் அனைத்து சோதனைகளிலும் பாசிட்டிவ் வருபவர்களுக்கு மட்டுமே எய்ட்ஸ் ஏற்படுகிறது.

எச்ஐவி தொற்று எவ்வாறு பரவுகிறது?

பெரும்பாலும் பாதுகாப்பற்ற உடலுறவால்தான் எச்ஐவி பரவும் அபாயம் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பயன்படுத்தப்பட்ட ஊசிகள், சிரிஞ்சுகளைப் பகிர்தல் அல்லது மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துதல், தொற்று பாதிக்கப்பட்ட ரத்தம் அளிக்கும் நன்கொடையாளர்கள் (மிகவும் அரிது), தொற்று ஏற்பட்ட தாயின் பிரசவம் அல்லது தாய்ப்பால்கூட குழந்தைக்கு தொற்று ஏற்படக் காரணமாக அமையலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

அறிகுறிகள்

தொற்றுக்கான அறிகுறிகள் சில நிலைகளாகக் கொள்ளப்படுகிறது. முதலில் காய்ச்சலில் தொடங்கி, சோர்வு மற்றும் தலைவலி, நிணநீர் கணுக்கள் வீக்கம், தசை வலி மற்றும் மூட்டு வலிகள், தோல் சொறி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, தொண்டை வலி மற்றும் வறட்டு இருமல், இரவில் வியர்த்தல்வரை தொற்று கொண்டு செல்லும்.

தடுப்பது எப்படி?

எச்ஐவி தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க சில வழிமுறைகளாக கூறுப்படுவன, எவருடனும் பாலியல் உறவுக்குப்பின், எச்ஐவி தொற்று பாதித்திருக்குமா என்று அச்சம் தோன்றினால், உறவுகொண்ட 72 மணிநேரத்துக்குள் அதற்கான சிகிச்சை மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

தொற்று பாதித்த ஒருவரின் மருத்துவச் சோதனையில் பாசிட்டிவ் என்றிருக்கும்; ஆனால், ரத்தத்தில் கிருமிகள் இல்லை என்று ரத்தச் சோதனை முடிவு கூறும். எச்ஐவி கிருமிகள் நமது செல்களுக்குள் ஒளிந்து கொள்வதுதான் இதன் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாலியல் உறவின்போது, ஆணுறைகளைப் பயன்படுத்துதல், எச்ஐவி மற்றும் பிற பாலியல் நோய்த் தொற்றுகளுக்கான பரிசோதனை மேற்கொள்ளுதல், ஊசிகள் மற்றும் சிரிஞ்சுகளைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்த்தல், பாதுகாப்பான பணியிடச் சூழலை அமைத்துக் கொள்வதன் மூலம் எச்ஐவி தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

அதிமுக - பாஜக சந்தா்ப்பவாத கூட்டணி: மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சனம்

அதிமுக, பாஜக, கட்சிகள் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் எம்.ஏ.பேபி விமா்சித்தாா். முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எம்.ஏ. பேபி அண்ணா அறிவா... மேலும் பார்க்க

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், மார்க்சிஸ்ட்... மேலும் பார்க்க

ராஜிநாமா முடிவை திரும்பப் பெற்றார் துரை வைகோ

மதிமுக முதன்மைச்செயலர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவை துரை வைகோ திரும்பப் பெற்றார். இதையடுத்து மல்லை சத்யா, துரை வைகோ இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. முன்னதாக சென்னை எழும்பூரில் உ... மேலும் பார்க்க

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.000 இருக்கைகள் வசதிய... மேலும் பார்க்க