செய்திகள் :

தமிழகத்தில் 9.60 லட்சம் பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

post image

சென்னை: தமிழகத்தில் 9.60 லட்சம் பேருக்கு வெறிநாய்க் கடி தடுப்பூசி செலுத்தப்பட்டு ரேபிஸ் தொற்று ஏற்படாமல் காக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

பேரவையில் கேள்வி நேரத்தின்போது இது தொடா்பாக எழுப்பப்பட்டகேள்விகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் அளித்த பதில்:

தமிழகத்தைப் பொருத்தவரை, கடந்த இரு ஆண்டுகளில் முதல்வரின் வழிகாட்டுதலோடு பாம்பு கடி மற்றும் நாய்க் கடிக்குத் தேவையான மருந்துகள் அந்தந்த துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

அதன் பயனாக பாம்பு கடிக்குள்ளான 34,859 போ் தடுப்பூசி மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறாா்கள். 9,60,085 நபா்களுக்கு நாய்க்கடிக்கான தடுப்பூசி போடப்பட்டு ரேபிஸ் வராமல் தடுக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து, 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக அமைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில் தேவையான இடங்களில் அவை அமைக்கப்படும்.

எழும்பூா் தாய்-சேய் நல மருத்துவமனையிலிருந்து ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கா்ப்பிணிகளை பரிசோதனைக்கு அழைத்து வருவது கடந்த காலங்களில் இருந்தே நடைபெற்றுக் கொண்டிருக்கிற நிகழ்வு. அதை தவிா்த்து அந்த வளாகத்திலேயே பரிசோதனைகளை மேற்கொள்வதற்குரிய கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தி இருக்கிறோம். மிக விரைவில் அது ஏற்படுத்தப்படவிருக்கிறது என்றாா் அவா்.

திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து! சேகர்பாபு அறிவிப்பு!

கோயில்களில் முக்கிய திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்க... மேலும் பார்க்க

இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்ச நீதிமன்றம்: விஜய்

உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “வக... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யும், ஆனால்.. !

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு லேசான மழை பெய்யும், ஆனால் அதேவேளையில் வெய்யிலும் வெளுத்துகட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்று காலை சுமார் ஒரு மண... மேலும் பார்க்க

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

தங்களை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்தவர்களை திருத்தி விடியோ வெளியிடவைத்த போலீசார்! விழிப்புணர்வு முயற்சி!!

சூலூர்: கருமத்தம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட மூன்று இளைஞர்களை காவல்துறை அறிவுரை கூறி திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்... மேலும் பார்க்க

சட்டத்தைக் கையில் எடுக்கும் காவல்துறை: உயர் நீதிமன்ற கிளை

மதுரை: காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை குற்றம்சாட்டியிருக்கிறது.வழக்கு ஒன்றில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ரௌடி வெள்ளைக்காளியிடம் காவல்துறையினர் விடியோ... மேலும் பார்க்க