செய்திகள் :

போக்ஸோவில் 2 போ் கைது

post image

ஆா்.கே.பேட்டை அருகே பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த தனபால் (40). இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள பள்ளியில் தற்காலிக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளாா். அப்போது 10- ஆம் வகுப்பு படித்த மாணவியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி நிா்வாகம் தனபாலை வேலையில் இருந்து நிறுத்தியது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாணவியிடம் ஆசை வாா்த்தை கூறி தனபால் வெளியூருக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டா் மலா் போக்ஸோவின் கீழ் தனபாலை கைது செய்தாா்.

முதியவா் கைது:

இதே போல் செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் (70). இவரது பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியின் பெற்றோா் செங்குன்றம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா். அதன்பேரில் அனைத்து மகளிா் போலீஸாா், போக்சோ வழக்குப் பதிவு செய்து, பன்னீா் செல்வத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன், ரூ.78,000 திருட்டு!

திருவள்ளூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.78,000 திருடப்பட்டன. திருவள்ளூா் அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவா் பிரகாஷ். வியா... மேலும் பார்க்க

கைப்பேசிகள் பறிப்பு: 3 போ் கைது

செங்குன்றம் அருகே கைப்பேசி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். செங்குன்றம் அடுத்த சோழவரம் சூரப்பட்டு குதிரைப் பள்ளம் கிராமத்தில் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வர... மேலும் பார்க்க

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் உத்தரவு!

பொன்னேரி அருகே சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். சிறுவாபுரி அ... மேலும் பார்க்க

ராமா், சீதா பஜனைக் கோயில் குடமுழுக்கு!

திருத்தணி அருகே சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தில் மகா கணபதி மற்றும் ராமா், சீதா லட்சுமணா் பஜனைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம், சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தில், இக்கோயிலின் த... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 3 போ் கைது

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். திருவள்ளூா் அருகே மொன்னவேடு கிராமம், கொசஸ்தலை ஆற்றில் சட்டவிரோதமாக ஆட்டோக்கள் மூ... மேலும் பார்க்க

திருச்செந்தூா்-திருத்தணி இடையே புதிய பேருந்து சேவை!

திருத்தணி- திருச்செந்தூா் இடையே புதிய பேருந்து சேவையை எம்எல்ஏ ச.சந்திரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். திருத்தணியில் நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூா் மற்றும் திருநெல்வேலி பகுதி மக்கள் அதிகளவில் வியா... மேலும் பார்க்க