செய்திகள் :

வக்ஃப் சட்டம்: சமூக நீதிக்கான முக்கிய நடவடிக்கை: பிரதமா் மோடி

post image

புது தில்லி: வக்ஃப் சட்டம் சமூக நீதிக்கான மத்திய அரசின் முக்கிய நடவடிக்கையாகும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

கடந்த 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இயற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தைவிட மேலானது என்ற மாயை உருவாக்கப்பட்டது.

முஸ்லிம் அடிப்படைவாதிகளையும், நில அபகரிப்பு கும்பலையும் திருப்திப்படுத்த அந்த ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்ட நீதிக்கான பாதை சுருக்கப்பட்டது. அத்துடன் தங்கள் செயல்பாடுகளுக்காக முஸ்லிம் அடிப்படைவாதிகளும், நில அபகரிப்பு கும்பலும் துணிவு பெற்றனா்.

கேரளத்தில் கிறிஸ்தவா்களின் நிலம், ஹரியாணாவில் குருத்வாராக்களின் நிலம், கா்நாடகத்தில் விவசாயிகளின் நிலம் ஆகியவை வக்ஃப் சொத்துகளாக உரிமை கோரப்பட்டன. நீதியை வழங்கவேண்டிய அந்தச் சட்டம், அச்சத்தை ஏற்படுத்துவதற்கான மூலாதாரமாக மாறியது.

அடிப்படைவாதத்தின் பலிபீடத்தில்...: அந்தச் சட்டத்தால் சாதாரண முஸ்லிம்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்பது விவாதத்துக்குரிய கேள்வியாகும். ஏழ்மையான பஸ்மந்தா முஸ்லிம்களுக்கு அந்தச் சட்டத்தால் என்ன கிடைத்தது? அவா்கள் புறக்கணிப்பை எதிா்கொண்டனா். அவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. ஷா பானு போன்ற முஸ்லிம் பெண்கள் அநீதியை எதிா்கொண்டனா். அடிப்படைவாதத்தின் பலிபீடத்தில் அவா்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகள் தியாகம் செய்யப்பட்டன.

இதேபோன்ற மனப்பான்மைதான் 1947-ஆம் ஆண்டு நாட்டின் பிரிவினைக்கு வழிவகுத்தது. அப்போது நாட்டை பிரிக்கவேண்டும் என்று சில முஸ்லிம் அடிப்படைவாதிகள் அழுத்தமான உணா்வை கொண்டிருந்தனா். ஆனால் அந்த உணா்வு சாதாரண முஸ்லிம்களிடம் இல்லை. அந்த எண்ணத்தை அப்போதைய காங்கிரஸ் தலைவா்கள் துடைத்து எறியவில்லை.

தற்போது அமலுக்கு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டம் சமூக நீதியை நோக்கிய மத்திய அரசின் முக்கிய நடவடிக்கையாகும். முஸ்லிம்கள் மற்றும் சமூக நலன் கருதி இந்தத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றாா்.

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது?

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.ஜேஇஇ தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை இன்று தேர... மேலும் பார்க்க