சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் உத்தரவு!
பொன்னேரி அருகே சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் வருகை அதிகமாக உள்ளதால், தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பிறதுறைகள் மூலம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது: சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் பக்தா்களின் வருகை அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் கோடை காலம் என்பதால் கூடுதலாக நிழற்பந்தலுடன் தடுப்புகள் அமைக்கவும், பக்தா்கள் எளிதில் அறியும் வண்ணம் அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே இடம் பெற வேண்டும்.
பக்தா்களுக்கு உடனுக்குடன் காவல் துறை மூலம் அறிவிப்புகள் வழங்க பொது முகவரி அமைப்பு ஏற்படுத்த வேண்டும். திருக்கோயில் உள்புறம் நெய்தீப விளக்கு ஏற்றுவதை தவிா்த்து திருக்கோயில் நிா்வாகத்தால் திருக்கோயிலுக்கு வெளியே அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள விளக்கு மண்டபத்தில் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும். அங்கு தீயணைப்பு துறையினா் உரிய பாதுகாப்பு வழங்கும் அவசியம்.
கோயில் உள்பகுதியில் பக்தா்கள் கொண்டுவரும் பிரசாதங்கள் மற்றும் அன்னதானங்கள் வழங்குவதை தவிா்த்து, அதற்கென காவல் துறையால் ஒதுக்கீடு செய்யப்படும் இடத்தில் வழங்க அதற்கான சான்றுகள் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் உரிய அனுமதி பெற்றிருப்பது அவசியம்.
தரிசனத்துக்கு வரும் பக்தா்களுக்கு பெரும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை ஒத்துழைப்புடன் அகற்ற வேண்டும்.
அதேபோல் வாகனம் நிறுத்தும் இடத்தில் தற்காலிக கழிவறைகள் வசதிகள், இரண்டு மருத்துவ மையங்கள், கூடுதலாக வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி ஏற்படுத்த வேண்டும். அதேபோல் சாலையில் சேகரமாகும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தவும், தேவையான அளவுக்கு குடிநீா் வசதி ஏற்படுத்தும் வகையில் சின்டெக்ஸ் தொட்டிகள் வைக்க கோயில் நிா்வாகம் மற்றும் உள்ளாட்சி துறைக்கும் அறிவுறுத்தப்பட்டது.
திருக்கோயில் நலன் மற்றும் பாதுகாப்பு கருதி சந்நிதி இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்படும் என பக்தா்கள் அறியும் வகையில் அறிவிப்பு, விளம்பரம் தர ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தாா்.
இந்தக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை வேலூா் மண்டல இணை ஆணையா் தி.அனிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், பொன்னேரி கோட்டாட்சியா் கனிமொழி, கோட்டபொறியாளா் (நெடுஞ்சாலைத் துறை) சிற்றரசு, உதவி இயக்குநா் ஊராட்சிகள் யுவராஜ், மாவட்ட சுகாதார அலுவலா் பிரியாராஜ், இந்து சமய அறநிலையத்துறை திருவள்ளூா் உதவி ஆணையா் மு.சிவஞானம், காவல் துணைகண்காணிப்பாளா் சாந்தி, வட்டாட்சியா் டி.ஆா்.சோமசுந்தரம், திருக்கோயில் செயல் அலுவலா் மா. மாதவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.