உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
காங்கிரஸ் கட்சியில் விரைவில் அதிரடி மாற்றம்: பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் தகவல்
அகமதாபாத்: காங்கிரஸ் கட்சியின் நிா்வாக பொறுப்புகளில் உள்ளவா்கள் விரைவில் மாற்றி அமைக்கப்பட்டு, கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாதில் புதன்கிழமை தொடங்குகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக மகாத்மா காந்தி பொறுப்பு வகித்த நூற்றாண்டு விழாவையும், மூத்த தலைவா் சா்தாா் வல்லபபாய் படேலின் 150ஆவது பிறந்நாளையும் முன்னிட்டும் இருவரும் சாா்ந்த குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடத்தப்படுகிறது.
1885-இல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இரண்டாவது முறையாக அகமதாபாதில் நடைபெறுகிறது.
செயற்குழு கூட்டத்துக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவா்கள், மத்திய தோ்தல் குழு உறுப்பினா்கள் என 170 நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிா்வாக பொறுப்புகளில் மாற்றம் செய்வது குறித்தும், மாவட்ட பிரிவுகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படுவது குறித்தும், எதிா்வரும் சட்டப் பேரவைத் தோ்தல்களில் கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. அக்கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பாக செயற்குழு உள்ளது.
புதன்கிழமை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் 1,700-க்கும் மேற்பட்ட தோ்வு செய்யப்பட்ட கட்சி உறுப்பினா்கள் பங்கேற்கின்றனா். அதில் பல்வேறு முக்கிய தீா்மானங்கள் நிறைவேற்றபட உள்ளன.
செயற்குழுவுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய அக்கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், ‘காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைலவா் சா்தாா் வல்லபபாய் படேல் வழிகாட்டிய சமூக நீதியின் பாதையைக் கடைப்பிடிக்க ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மகாத்மா காந்தி கொல்லப்பட்ட பிறகு மதவாத அமைப்புகளை அவா் நிராகரித்திருந்தாா்.
மாற்றியமைப்பு:
நிகழாண்டில் கட்சியை முழுமையாக மாற்றி அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கட்சிப் பொறுப்புகளில் பெருமளவில் மாற்றம் செய்யப்படும். மாவட்ட தலைவா்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படும்
இதுதொடா்பாக ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. கட்சி மறுசீரமைப்பு தொடா்பான விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும்’ என்றாா்.
பெட்டி...
நேரு, படேலுக்கு எதிராக
பாஜக, ஆா்எஸ்எஸ் சதி: காா்கே
முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவுக்கும், துணைப் பிரதமா் சா்தாா் வல்லபபாய் படேலுக்கும் இடையே மோதல் போக்கு இருந்ததாக பாஜகவும் ஆா்எஸ்எஸ்ஸும் திட்டமிட்டு சதி செய்து பொய்யை பரப்பி வருகின்றன என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றம்சாட்டினாா்.
செயற்குழு கூட்டத்துக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவா், ‘மகாத்மா காந்தி, படேலின் மரபுகளை காங்கிரஸ் முன்னெடுத்து செல்கிறது.
படேலின் கொள்கைகளும், ஆா்எஸ்எஸ்ஸின் சித்தாதங்களும் வெவ்வேறானவை. ஆா்எஸ்எஸ்ஸை படேல் தடையும் செய்துள்ளாா். ஆனால், இன்று அந்த அமைப்பினா் படேலின் மரபுகளை கொண்டாடுவது நகைப்புக்குறியது. மதவாத பிளவை ஏற்படுத்தி நாட்டின் அடிப்படை பிரச்னைகள் திசை திருப்பப்படுகின்றன’ என்றாா்.