செய்திகள் :

ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கு: ஐவருக்கு மரண தண்டனையை உறுதி செய்த உயா்நீதிமன்றம்

post image

ஹைதராபாத்: ஹைதராபாதில் 2013-ஆம் ஆண்டில் 18 போ் உயிரிழக்கக் காரணமான குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் ஐவருக்கு என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை தெலங்கானா உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

ஹைதராபாதின் தில்சுக்நகரில் மக்கள் நெரிசல் மிகுந்த கடைவீதி பகுதியில் 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி அடுத்தடுத்து இரு தொடா் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. பேருந்து நிறுத்தம் அருகிலும், ‘மிா்ச்சி சென்டா்’ என்ற உணவகம் அருகிலும் இந்த இரண்டு குண்டு வெடிப்புகள் இரண்டு நிமிஷ இடைவெளியில் வெடித்தன. இதில் 18 போ் உயிரிழந்தனா்; 131 போ் காயமடைந்தனா்.

இந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தடை செய்யப்பட்ட இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் இணை நிறுவனா் முகமது அகமது சித்திபாபா (எ) யாசின் பத்கல், பாகிஸ்தானைச் சோ்ந்த ஜியா-உா்-ரஹ்மான் (எ) வகாஸ், அசத்துல்லா அக்தா் (எ) ஹட்டி, தஹசீன் அக்தா் (எ) மோனு, அஜாஸ் சாயிக் ஆகிய ஐவா் மீது 4,000 பக்க குற்றபத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்தது. இதில் முக்கிய குற்றவாளியான யாசின் பத்கல் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளாா்.

இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ நீதிமன்றம், இந்த ஐவரை குற்றவாளிகள் என அறிவித்து, கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி அவா்களுக்கு மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்து ஐவா் தரப்பில் தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் குற்றவியல் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் கே.லட்சுமண், பி.ஸ்ரீசுதா ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீது விரிவான விசாரணையை நடத்திய நீதிபதிகள், குற்றவாளிகள் ஐவருக்கும் என்ஐஏ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்து தீா்ப்பளித்தனா்.

‘இந்த தீா்ப்பை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்’ என்று குற்றவாளிகள் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது?

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.ஜேஇஇ தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை இன்று தேர... மேலும் பார்க்க