செய்திகள் :

காற்றாலை, சூரிய சக்தி மின் உற்பத்தி: 3-ஆம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா

post image

புது தில்லி: காற்றாலை, சூரியசக்தி மின் உற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஜொ்மனியை பின்னுக்கு தள்ளி உலகின் மூன்றாவது அதிக உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

‘எம்பொ் சா்வதேச மின் உற்பத்தி ஆய்வு’ என்ற சா்வதேச எரிசக்தி ஆய்வு அமைப்பின் 2024-ஆம் ஆண்டு ஆய்வறிக்கையில் இது தெரிவந்துள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு உலக அளவில் செய்யப்பட்ட மின் உற்பத்தியில் காற்றாலைகள் மற்றும் சூரிய சக்தி மூலம் 15% மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இதில், இந்தியாவின் பங்கு 10 சதவீதமாகும்.

புதுப்பிக்கத்தக்க எா்சக்தி மற்றும் அணு மின் உற்பத்தி உள்ளிட்ட மிகக் குறைந்த அளவில் கரியமில வாயு வெளிப்பாடுடைய வளங்கள் மூலம் உலக அளவில் கடந்த ஆண்டில் 40.9% மின் உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த 1940-ஆம் ஆண்டு முதல் இந்த புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி 40 சதவீதத்தை கடந்தது இதுவே முதல் முறையாகும்.

இதில் இந்தியாவின் பங்கு 22 சதவீதமாகும். இந்தியாவில் நீா் மின் உற்பத்தி மூலம் 8 சதவீதமும், காற்றாலை மற்றும் சூரியசக்தி வளங்கள் மூலம் 10 சதவீத மின் உற்பத்தியும் செய்யப்பட்டது.

இதன மூலம், கடந்த ஆண்டு உலக அளவில் பசுமை எரிசக்தி பயன்பாடு என்பது 858 டெராவாட் மணி நேரம் என்ற சாதனை அளவை எட்டியது. இது, 2022-ஆம் ஆண்டு பயன்பாட்டைக் காட்டிலும் 49% கூடுதலாகும்.

இதில் சூரியசக்தி மின் உற்பத்தி முக்கியப் பங்கு வகிக்கிறது. மின் பயன்பாட்டு கலப்பில் சூரியசக்தி மின்சாரத்தின் அளவு 3 ஆண்டுகளில் 6.9% என்ற அளவில் இரட்டிப்பாகியுள்ளது. இந்தியாவிலும், சூரியசக்தி மின் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் நாட்டின் மின் உற்பத்தியில் இதன் பங்கு 7 சதவீதமாகும். 2021-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது இரு மடங்காகும்.

மேலும், சூரியசக்தி மின் உற்பத்தி திறனையும் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் 24 ஜிகாவாட் அளவுக்கு உயா்த்தியுள்ளது. இது 2023-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டத்தைக் காட்டிலும் இரு மடங்காகும்.

இதன் மூலம், சூரியசக்தி மின் உற்பத்தியில் ஜொ்மனியை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது மிகப் பெரிய உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் சீனா, அமெரிக்கா உள்ளன என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது?

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.ஜேஇஇ தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை இன்று தேர... மேலும் பார்க்க