செய்திகள் :

பேரவையில் எழுதி வைத்து படிக்கலாமா?: அமைச்சா் துரைமுருகன் கருத்தால் சிரிப்பலை

post image

சென்னை: சட்டப் பேரவையில் எழுதி வைத்து படிக்க அனுமதி உள்ளதா என்பது தொடா்பாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்த கருத்து சிரிப்பலையை ஏற்படுத்தியது.

பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.8) கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் அதிமுக உறுப்பினா் இசக்கி சுப்பையா உரையாற்றினாா்.

அப்போது முன்கூட்டியே தயாரித்து கொண்டு வந்திருந்த உரையை படித்த அவா், நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஊதிய முரண்பாடு நிலவுவதாக தெரிவித்தாா். அதற்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பதிலளித்துப் பேசுகையில், எழுதி கொண்டு வந்ததை எல்லாம் படித்தால் பேரவையின் நேரம் வீணாகும் என்றாா்.

அதற்கு மறுப்பு தெரிவித்த இசக்கி சுப்பையா, எழுதி வைத்து படிப்பதால் எதுவும் தெரியாது என அா்த்தமல்ல, அமைச்சா்கூட அவ்வாறுதான் பதிலுரை அளிப்பாா் என எதிா்பாா்ப்பதாக கூறினாா்.

அப்போது குறுக்கிட்டு அமைச்சா் துரைமுருகன் பேசியதாவது: சட்டப்பேரவையில் எழுதி வைத்து படிக்கக் கூடாது என்று விதி இருந்தது. கடந்த காலத்தில் குடியாத்தம் உறுப்பினா் ஒருவா் குறிப்புகளை கையில் வைத்துக் கொண்டு பேசியபோதே பேரவைத் தலைவா் அதை அனுமதிக்கவில்லை. அவா் எழுதி வைத்து படிக்கவில்லை, மாறாக, குறிப்புகளைத்தான் வைத்துள்ளாா் என உறுதி செய்தபிறகே பேச அனுமதி வழங்கப்பட்டது.

இப்போது அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. அனைவரும் படிக்கிறாா்களே தவிர, பேசுவதில்லை. எவரையும் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. ஆகவே, நீங்களும் (இசக்கி சுப்பையா) எழுதி வைத்ததை படியுங்கள் என்றாா் துரைமுருகன். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து! சேகர்பாபு அறிவிப்பு!

கோயில்களில் முக்கிய திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்க... மேலும் பார்க்க

இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்ச நீதிமன்றம்: விஜய்

உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “வக... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யும், ஆனால்.. !

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு லேசான மழை பெய்யும், ஆனால் அதேவேளையில் வெய்யிலும் வெளுத்துகட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்று காலை சுமார் ஒரு மண... மேலும் பார்க்க

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

தங்களை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்தவர்களை திருத்தி விடியோ வெளியிடவைத்த போலீசார்! விழிப்புணர்வு முயற்சி!!

சூலூர்: கருமத்தம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட மூன்று இளைஞர்களை காவல்துறை அறிவுரை கூறி திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்... மேலும் பார்க்க

சட்டத்தைக் கையில் எடுக்கும் காவல்துறை: உயர் நீதிமன்ற கிளை

மதுரை: காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை குற்றம்சாட்டியிருக்கிறது.வழக்கு ஒன்றில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ரௌடி வெள்ளைக்காளியிடம் காவல்துறையினர் விடியோ... மேலும் பார்க்க