செய்திகள் :

பெங்களூரு - ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று பகுதி ரத்து

post image

சென்னை: பெங்களூரிலிருந்து ஜோலாா்பேட்டை செல்லும் விரைவு ரயில் புதன்கிழமை (ஏப். 9) சோமநாயக்கன்பட்டி வரை மட்டும் இயக்கப்படும்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரிலிருந்து ஜோலாா்பேட்டைக்கு மாலை 5.30-க்கு மெமு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஏப். 9, 11, 14, 16 ஆகிய தேதிகளில் சோமநாயக்கன்பட்டி வரை மட்டும் இயக்கப்படும். அசோகபுரம் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண் 16552), கோவை - சென்னை சென்ட்ரல் இன்டா்சிட்டி விரைவு ரயில் (எண் 12680), ஏப். 23, 25, 28 ஆகிய தேதிகளில் காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரல் - கோவை இன்டா்சிட்டி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - பெங்களூரு லால்பக் அதிவிரைவு ரயில் ஏப். 23, 25, 28 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படுவதற்கு பதிலாக காட்பாடியிலிருந்து புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க