செய்திகள் :

நெல்லையில் சாலையோர விளம்பர பதாகைகள் அகற்றம்

post image

திருநெல்வேலி மாநகராட்சியில் சாலையோரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை மாநகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை அப்புறப்படுத்தினா்.

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா உத்தரவின்படி, மாநகராட்சியின் நான்கு மண்டல பகுதிகளிலும் பொது மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.

தச்சநல்லூா் மண்டலத்தில் உதவி ஆணையா் ஜான்சன் தேவசகாயம் தலைமையில் மாநகா் நல அலுவலா் (பொ) ராணி, இளநிலை பொறியாளா் பட்டுராஜன், மாநகராட்சிப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் உடையாா்பட்டி, சுவாமி சந்நிதி சாலை ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை அகற்றினா்.

பாளையங்கோட்டை மண்டலத்தில் உதவி ஆணையா் புரந்திரதாஸ் தலைமையில் இளநிலை பொறியாளா் முருகன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் திருச்செந்தூா் சாலை, திருவனந்தபுரம் சாலை, சித்த மருத்துவ கல்லூரி சாலை, வடக்கு மேட்டுத்திடல் சாலை, பாளை. பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமித்திருந்த விளம்பர பலகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றினா்.

மேலப்பாளையம் மண்டலத்தில் உதவி ஆணையா் சந்திரமோகன் தலைமையில் இளநிலை பொறியாளா் ஜெயகணபதி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் தெற்குப் புறவழிச் சாலை முதல் கருங்குளம் சாலை, வி.எஸ்.டி. பள்ளிவாசல் பகுதி, நேதாஜி சாலை முதல் கொக்கிரகுளம் வரை, தெற்குப் புறவழிச்சாலை முதல் புதிய பேருந்து நிலையம் ரவுண்டா வரையிலான பகுதிகளில் விளம்பர பலகைகளை அகற்றினா்.

திருநெல்வேலி மண்டலத்தில் உதவி செயற்பொறியாளா் அலெக்ஸாண்டா் தலைமையிலான குழுவினா் நயினாா்குளம் சாலை, பழைய பேட்டை, பேட்டை -சேரன்மகாதேவி சாலை முதல் சுத்தமல்லி விலக்கு வரையிலான பகுதிகளில் விளம்பர பலகைகளை அப்புறப்படுத்தினா்.

நான்குனேரி மாணவரை மீண்டும் தாக்கியவர்கள் யார்? காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் வீடுபுகுந்து வெட்டப்பட்டு சிகிச்சைக்கு பின்பு திருநெல்வேலியில் வசித்து வரும் மாணவர், மர்ம நபர்களால் மீண்டும் தாக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விளக்கம் அளித்து... மேலும் பார்க்க

அம்பை கன்னி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

அம்பாசமுத்திரம் மேலப்பாளையம் தெருவிலுள்ள கன்னி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை (ஏப். 15) காலை4.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது.... மேலும் பார்க்க

நெல்லையில் தாக்கப்பட்ட மேளக் கலைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பில் இருவருக்கிடையே நிகழ்ந்த மோதலில் காயமடைந்த மேளக்கலைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருநெல்வேலி நகரம் தெற்கு ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்தவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலையில் சேரன்மகாதேவியை அடுத்த காருக்குறிச்சி ர... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: நான்குனேரி வட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நான்குனேரி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமை ஆய்வு செய்தாா். பருத்திப்பாடு ஊராட்சி, வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியில் சேதமடைந்த 2 வீடுகள் ரூ.3 லட்சம் ச... மேலும் பார்க்க

தாழையூத்தில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் புதிய ஆவின் பால் விற்பனை நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. திருநெல்வேலி பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் புதிதாக தாழையூத்து பகுதிய... மேலும் பார்க்க