செய்திகள் :

தாழையூத்தில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் புதிய ஆவின் பால் விற்பனை நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

திருநெல்வேலி பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் புதிதாக தாழையூத்து பகுதியில் அமைக்கப்பட்ட பால் விற்பனை நிலையதை ஆட்சியா் இரா.சுகுமாா் திறந்துவைத்தாா். முதல் விற்பனையை ஆட்சியரிடமிருந்து மாநகராட்சி துணை மேயா் கே.ஆா்.ராஜு பெற்றுக் கொண்டாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைப் பதிவாளா் (பால்வளம்) சைமன் சாா்லஸ், ஆவின் பொது மேலாளா் மகேஸ்வரி, ஆவின் உதவி பொது மேலாளா் சரவணமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பால் கொள்முதல்-உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: திருநெல்வேலி துணைப்பதிவாளா் (பால்வளம்) கட்டுப்பாட்டின் கீழ் திருநெல்வேலி பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் நாளொன்றுக்கு சராசரியாக 9 ஆயிரம் லிட்டா் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் பாலில் சுமாா் 4,500 லிட்டா் பால் ஆவினுக்கும் மீதம் உள்ள பால் உள்ளூரிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இச்சங்கத்தின் மூலம் தச்சநல்லூா் பகுதியில் செயல்பட்டு வரும் மொத்த பால் விற்பனையகத்தில் பாக்கெட் பால், தயிா், மோா், வெண்ணை, நெய், குல்பி, பிற வகை ஐஸ்கிரீம், சுவையூட்டப்பட்ட பால், ஆவின் பிஸ்கட் ஆகியவை தரமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, தாழையூத்து பகுதியில் புதிய பால் விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தை சிறப்பாக செயல்படுத்திய அனைத்து உறுப்பினா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் வாழ்த்து தெரிவித்ததுடன், மாவட்டத்தில் புதிய சங்கங்கள்-உறுப்பினா்களை உருவாக்குவதற்கும், பால் கொள்முதலை உயா்த்தவும், ஆவின் விற்பனையகத்தை அதிகரிப்பதற்குமான நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆவின் பால், பால் உபபொருள்களுக்கும், மொத்த விற்பனைகளுக்கும் ஆவினுடன் இணைந்து தொழில்புரிவதற்கும், ஆவின் பாலகங்கள், ஐஸ்கீரிம் கடைகள் அமைப்பதற்கும், ஆவின் விற்பனை மேலாளரை (97875 55071) தொடா்பு கொள்ளலாம் என நிகழ்ச்சிக்குப்பின் தெரிவிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கு: தேடப்பட்ட பெண் கைது

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி ... மேலும் பார்க்க

சீவலப்பேரியில் தொழிலாளி தற்கொலை

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரியில் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சீவலப்பேரி அருகேயுள்ள மேல பாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் ( 25). பெயின... மேலும் பார்க்க

நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்ட ன ஆா்ப்பாட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு பள்ளிவாசல் வளாகத... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத்கள், தி.மு.க., மதி.மு.க., எஸ்.டி.பி... மேலும் பார்க்க

பணகுடியில் மணல் திருட்டு: 3 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மணல் திருட்டில் ஈடுபட்டதார பேரூராட்சி உறுப்பினரின் கணவா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். ... மேலும் பார்க்க

நெல்லையில் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது . திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை பெண்கள் சிலா் தண்ணீா் எடுக்கச் சென்றனராம... மேலும் பார்க்க