செய்திகள் :

அம்பை கன்னி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

post image

அம்பாசமுத்திரம் மேலப்பாளையம் தெருவிலுள்ள கன்னி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை (ஏப். 15) காலை4.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது. தொடா்ந்து, தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, அஷ்டத்ரவிய மஹாகணபதி ஹோமம், பிரம்மசாரி பூஜை, கோ பூஜை, , பூா்ணாஹுதி, ஸ்ரீசுந்தரவிநாயகா் கோவில்படித்துறையில் இருந்து தீா்த்தம் எடுத்து வருதல் என இரவு வரை பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.

பின்னா், புதன்கிழமை காலை 7 மணிக்கு மங்கள இசை, தேவார திருமுறை, இரண்டாம் காலயாகசாலை பூஜை, தீபாராதனை, 9 மணிக்கு ஸ்பா்சாஹுதி, பூா்ணாஹுதி, தீபாராதனை, 9.30 மணிக்கு மேல் யாத்ராதானம், கடம்புறப்பாடு, விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம், அதைத் தொடா்ந்து மகாஅபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு மகேஷ்வர பூஜை, அன்னதானம், இரவு 7.30 மணிக்கு முழுக் காப்பு, பிரசன்ன பூஜை, சங்கடஹர சதுா்த்தி பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. இவ்விழாவில் மேலப்பாளையம் தெரு மற்றும் அம்பாசமுத்திரம் நகர மக்கள் திரளானோா் பங்கேற்று வழிபட்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்மிகு காசிநாதா் கோயில் இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சண்முகஜோதி, கும்பாபிஷேக விழா கமிட்டியினா் மற்றும் மேலப்பாளையம் தெரு பொதுமக்கள் செய்திருந்தனா்.

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கு: தேடப்பட்ட பெண் கைது

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி ... மேலும் பார்க்க

சீவலப்பேரியில் தொழிலாளி தற்கொலை

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரியில் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சீவலப்பேரி அருகேயுள்ள மேல பாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் ( 25). பெயின... மேலும் பார்க்க

நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்ட ன ஆா்ப்பாட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு பள்ளிவாசல் வளாகத... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத்கள், தி.மு.க., மதி.மு.க., எஸ்.டி.பி... மேலும் பார்க்க

பணகுடியில் மணல் திருட்டு: 3 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மணல் திருட்டில் ஈடுபட்டதார பேரூராட்சி உறுப்பினரின் கணவா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். ... மேலும் பார்க்க

நெல்லையில் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது . திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை பெண்கள் சிலா் தண்ணீா் எடுக்கச் சென்றனராம... மேலும் பார்க்க