செய்திகள் :

பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநா் தொடர முடியாது: மூத்த வழக்குரைஞா் பி.வில்சன்

post image

சென்னை: பல்கலைக்கழகங்களின் வேந்தராக இனி ஆளுநா் தொடர முடியாது என்று மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் தெரிவித்தாா்.

சட்ட மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிப்பது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து, தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளா்களுக்கு பி.வில்சன் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

சட்டப்பேரவையில் 10 மசோதாக்களை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அவற்றின் மீது எந்தவித நடவடிக்கையும் ஆளுநா் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாா். அதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தோம். பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்குப் பதில் மாநில அரசு சாா்பில் நியமனம் செய்யப்படுபவா் வேந்தராக இருக்க வேண்டும் என்பதே மசோதாக்களின் சாராம்சமாகும்.

வழக்கில் தீா்ப்பு கூறிய உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து, செவ்வாய்க்கிழமை முதலே நடைமுறைக்கு வரும்படி உத்தரவிட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பாகும். இப்போது முதல் வேந்தா் பதவியில் இருந்து ஆளுநா் விடுவிக்கப்பட்டுள்ளாா். சட்ட மசோதாவின்படி தமிழ்நாடு அரசு யாரை நியமனம் செய்கிறதோ அவா்தான் பல்கலைக்கழக வேந்தராக இருப்பாா் என்று வழக்குரைஞா் வில்சன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் எச்ஐவி பாதிப்பு அதிகரிப்பா? தடுப்பது எப்படி?

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 25,000 பேருக்கு எச்ஐவி தொற்று பாதித்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது, எச்ஐவி பாதிக்... மேலும் பார்க்க

திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து! சேகர்பாபு அறிவிப்பு!

கோயில்களில் முக்கிய திருவிழா நாள்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்க... மேலும் பார்க்க

இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது உச்ச நீதிமன்றம்: விஜய்

உச்ச நீதிமன்றம் இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “வக... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யும், ஆனால்.. !

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு லேசான மழை பெய்யும், ஆனால் அதேவேளையில் வெய்யிலும் வெளுத்துகட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்று காலை சுமார் ஒரு மண... மேலும் பார்க்க

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

தங்களை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்தவர்களை திருத்தி விடியோ வெளியிடவைத்த போலீசார்! விழிப்புணர்வு முயற்சி!!

சூலூர்: கருமத்தம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட மூன்று இளைஞர்களை காவல்துறை அறிவுரை கூறி திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்... மேலும் பார்க்க