செய்திகள் :

லாபதா லேடீஸ் திருடப்பட்டதா? திரைக்கதை எழுத்தாளர் ஆவேஷம்!

post image

குறும்படத்திலிருந்து திருடப்பட்டதாகக் கூறும் குற்றச்சாட்டுக்கு லாபதா லேடீஸ் திரைக்கதை எழுத்தாளர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இயக்குநா் கிரண் ராவ் இயக்கத்தில் பிப்லாப் கோஸ்வாமி எழுத்தில் கடந்தாண்டு வெளியான லாபதா லேடீஸ் திரைப்படம், ரசிகா்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

பிப்லாப் கோஸ்வாமி

நடிகா் அமீா்கான், இயக்குநா் ராவ், ஜியோ நிறுவனம் ஆகியோரின் கூட்டு தயாரிப்பில் உருவான இப்படம் 97-ஆவது ஆஸ்கா் விருதுக்கு தேர்வாகி பின்னர் போட்டியிலிருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படம் 2019இல் வெளியான அரேபிய குறும்படமான ‘புர்கா சிட்டி’ கதையைப் போலவே இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதற்கு இதன் திரைக்கதை எழுத்தாளர் பிப்லாப் கோஸ்வாமி கூறியதாவது:

100 சதவிகிதம் ஒரிஜினலான கதை

எங்களது கதை, கதாபாத்திரங்கள், வசனங்கள் அனைத்தும் 100 சதவிகிதம் ஒரிஜினல் (அசலானது). இதில் கதைத்திருட்டு என்பது முழுமையான பொய்.

இந்தக் குற்றச்சாட்டுகள் என்னுடைய உழைப்பை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவையும் சிறுமைப்படுத்துவதாகும்.

இந்தப் படத்தின் சுருக்கமான கதையை, முழுக்கதையின் மேலோட்டமான விவரிப்புடன் ’டூ பேட்ர்ஸ்’ (இரண்டு பறவைகள்) என்ற தலைப்பில் திரைக்கதை ஆசிரியர்கள் அசோசியேஷனில் ஜூலை 3, 2014-இல் பதிவு செய்துள்ளேன்.

இதில் தெளிவாக தவறான மணப்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருவதையும் குடும்பத்தினர் அதிர்ச்சி ஆவதையும் எழுதி இருக்கிறேன். அங்குதான் கதையே எழுச்சி பெறுகிறது.

திரைக்கதையை 2018இல் பதிவு செய்துள்ளேன்

வருத்தமடைந்த கணவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார். அங்கு அவரிடம் இருப்பதும் முகம் மறைக்கப்பட்ட புகைப்படம் மட்டுமே.

முழுமையான திரைக்கதையை 2018இல் பதிவு செய்துள்ளேன். சினிஸ்டான் ஸ்டோரிடெல்லர்ஸ் போட்டியில் 2ஆம் இடம் பிடித்தது.

பல ஆண்டு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்தக் கதை, கதாபாத்திரங்கள், வசனங்கள், கதைச் சொல்லல் பாணி, சமூக தாக்கம் என பாலின பாகுபாட்டையும் ஆணாதிக்கத்தையும் ஆழமாகவும் அதேசமயம் நுணுக்கமாக எழுதியிருப்பேன் எனக் கூறியுள்ளார்.

மோகன்லாலின் துடரும் வெளியீட்டுத் தேதி!

நடிகர் மோகன்லாலின் துடரும் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான எம்புரான்திரைப்படம் ரூ. 250 க... மேலும் பார்க்க

பன்றி மேய்ப்பவரை வில்லனாகக் காட்டியதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்: வசந்த பாலன்

பன்றி மேய்ப்பவரை வில்லனாகக் காட்டியதற்காக மன்னிப்புக் கேட்பதாக இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார். நீலம் பண்பாட்டு மையம் சார்பாக இயக்குநர் பா. இரஞ்சித் ஒவ்வொரு ஆண்டும் கலை நிகழ்ச்சிகளையும் திரைப்ப... மேலும் பார்க்க

ஆட்டோகிராஃப் - மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இயக்குநர் சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் மறு வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சேரன் சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் ‘ஆட்டோகிராஃப்’. இந்தப் படத்தில் சினேகா, கோபி... மேலும் பார்க்க

இலுப்பக்கோரை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு!

இலுப்பக்கோரை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயம் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ... மேலும் பார்க்க

எறும்பீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

எறும்பீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் விமர்சையாக நடைபெற்றது. திருவெறும்பூர் என பெயர் வர காரணமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோயில்... மேலும் பார்க்க

ஜூலையில் வாடிவாசல் படப்பிடிப்பு!

வாடிவாசல் படப்பிடிப்பு குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார்.'கங்குவா' படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டத... மேலும் பார்க்க