செய்திகள் :

பிகாரில் ராகுல் தலைமையில் வெள்ளை டி-ஷர்ட் பேரணி

post image

பிகாரிலிருந்து வேலை தேடி மக்கள் இடம்பெயர்வதை நிறுத்தக் கோரியும், இளைஞர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தியும் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் இன்று வெள்ளைச் சட்டை பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெகுசராய் நகரின் மத்தியப் பகுதியிலிருந்து ராகுல் காந்தி தலைமையில் தொடங்கிய இந்தப்பேரணியில் கன்னையா குமார், மாநில தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

வெள்ளைச் சட்டையுடன் இளைஞர்கள் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார் ராகுல் காந்தி. இந்த நிலையில், உடனடியாக பாதுகாப்புப் படைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தும் பதாகைகளை இந்தப் பேரணியில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் கையில் வைத்திருந்தனர். முழக்கங்களையும் எழுப்பினர்.

இடம்பெயர்வதை நிறுத்துங்கள், வேலை வாய்ப்பு வழங்குங்கள் என்ற தலைப்பில் இன்று நடைபெற்று வரும் பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுத்து ராகுல் முன்னதாக ஒரு விடியோ வெளியிட்டிருந்தார். அதில், பிகார் இளைஞர்களே, நான் உங்கள் பேரணியில் உங்களின் தோளோடு தோள் நின்று போராட பெகுசாரை வருகிறேன்.

பிகார் இளைஞர்களின் பிரச்னை, போராட்டம், உணர்வு என அனைத்தையும் உலக மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதே இந்த நடைப்பயணத்தின் நோக்கம் என்றும், அனைவரும் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்து வாருங்கள், கேள்வி கேளுங்கள். உங்கள் உரிமைகளை எழுப்புங்கள், வரும் பேரவைத் தேர்தலில் அந்த அரசை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

நாடு கடத்தப்பட்டார் தஹாவூா் ராணா! தில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

மும்பை தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை அழைத்துக் கொண்டு புறப்பட்ட இந்தியா அதிகாரிகள் இன்று தில்லி வந்தடையவுள்ளனர்.அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலையே, ல... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டம் அமலாகாது - முதல்வா் மம்தா உறுதி

‘அண்மையில் நடைமுறைக்கு வந்த வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது. மாநிலத்தின் சிறுபான்மையினா் மற்றும் அவா்களின் சொத்துகளை நான் நிச்சயம் பாதுகாப்பேன்’ என்று அந்த மாநில முதல்வா் ம... மேலும் பார்க்க

ஊழல் குற்றச்சாட்டு: பினராயி விஜயன் பதவி விலக பாஜக வலியுறுத்தல்

‘கேரள முதல்வா் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்’ என பாஜக புதன்கிழமை வலியுறுத்தியது. மேலும், அவா் தலைமையிலான அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உயா்நிலைக் குழு அமைக்கவும் பாஜக கோரிக்கை வைத்... மேலும் பார்க்க

ஏா் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீா் கழித்த நபா் - நடவடிக்கை எடுக்க அரசு உறுதி

தில்லி-பாங்காக் (தாய்லாந்து) இடையிலான ஏா் இந்தியா விமானத்தில் சக பயணி மீது மற்றொரு பயணி சிறுநீா் கழித்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: நியமனம் ரத்தான ஆசிரியா்கள், ஊழியா்கள் போராட்டம் - போலீஸாருடன் மோதல்

மேற்கு வங்கத்தில் உச்சநீதிமன்றத்தால் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட ஏராளமான ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்கள், தங்களுக்கு மீண்டும் பணி கோரி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பல இடங்களில் போராட்டக்கா... மேலும் பார்க்க

அரசுத் துறைகளில் மின்சார வாகனப் பயன்பாடு: அறிக்கை சமா்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

அரசின் பல்வேறு துறைகளில் மின்சார வாகனம் பயன்படுத்துவது குறித்த திட்ட அறிக்கையை சமா்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நகா்ப்புறங்களில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குற... மேலும் பார்க்க