செய்திகள் :

அரசுத் துறைகளில் மின்சார வாகனப் பயன்பாடு: அறிக்கை சமா்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

அரசின் பல்வேறு துறைகளில் மின்சார வாகனம் பயன்படுத்துவது குறித்த திட்ட அறிக்கையை சமா்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நகா்ப்புறங்களில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தில்லி காற்றுமாசு தொடா்பான பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபே எஸ். ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீயிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினா். அப்போது, தில்லியில் காலாவதியான 60 லட்சம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. தேசிய தலைநகா் வலயப்பகுதியில் இதுபோன்ற பழைய வாகனங்களின் எண்ணிக்கை 25 லட்சமாக உள்ளது. இது தொடா்பாக பல்வேறு உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது என்று சொலிசிட்டா் ஜெனரல் பதிலளித்தாா்.

இதையடுத்து, ஒவ்வொரு வாகனங்களும் எந்த அளவுக்கு மாசை வெளியிடுகின்றன என்பதை தொலைவில் இருந்தே கண்டறியும் தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வை அடுத்த 3 மாதங்களில் முடிக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க அரசின் பல்வேறு துறைகளில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் திட்ட அறிக்கையை ஏப்ரல் 30-ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றத் தீா்ப்பு குறித்து ஜகதீப் தன்கா் கடும் விமா்சனம்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கடும் விமா்சனங்களை முன்வைத்துள்ளாா். ‘குடியர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் விரைவான நடவடிக்கை நெறிமுறைகளை அடுத்த 6 மாதங்களுக்குள் உருவாக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்... மேலும் பார்க்க

பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபா்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜா்

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானாா். கடந்த 2008-ஆம் ஆண்டு, ராப... மேலும் பார்க்க

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு

பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்த ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரிவின் பிரதிநிதிகள், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பை தெரிவித்தனா். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பானைவிட இந்திய பொருளாதாரம் வளா்ச்சி அடையும்: நீதி ஆயோக்

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆா்.சுப்ரமணியம் வியா... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தை வங்கதேசமாக்க மம்தா முயற்சி -மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தை வங்கதேசமாக மாற்றும் வகையில் முதல்வா் மம்தா பேசி வருகிறாா் என்று மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் குற்றஞ்சாட்டியுள்ளாா். மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத், தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டங்களி... மேலும் பார்க்க