செய்திகள் :

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

post image

சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் விரைவான நடவடிக்கை நெறிமுறைகளை அடுத்த 6 மாதங்களுக்குள் உருவாக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுவதற்காக அரசு நெறிமுறை வகுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வழக்குரைஞா் கிஷன் சந்த் ஜெயின் தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு வழங்கிய உத்தரவில், ‘ஓட்டுநா்களின் வேலை நேரத்தை அமல்படுத்துவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சம்பந்தப்பட்ட துறைகளின் கூட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நடத்த வேண்டும்.

நமது நாட்டில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதற்கான காரணங்கள் வேறுபட்டிருக்கலாம். ஆனால், சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடி உதவி கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் பொதுவாக உள்ளன.

விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்காக விரைவான பதிலளிப்பு நெறிமுறைகளைக் கொண்டிருப்பதில் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பணியாற்ற வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இதற்காக ஆறு மாதங்கள் அவகாசம் அளிக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனா்.

ஈஸ்டர் திருநாள்: பிரதமர் மோடி வாழ்த்து!

ஈஸ்டர் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஈஸ்டர் திருநாளையொட்டி, மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர... மேலும் பார்க்க

காங்கிரஸின் நாடுதழுவிய போராட்டம் அறிவிப்பு!

அரசியலமைப்புக்காக நாடுதழுவிய போராட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநிலப் பொற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ராகுல் காந்தி!

காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றடைந்தார். அமெரிக்காவின் பாஸ்டன் லோகன் விமான நிலையத்தில் ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சா... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: வன்முறை பாதித்த பகுதியில் ஆய்வு செய்த ஆளுநா், தேசிய மகளிா் ஆணையக் குழு

மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட முா்ஷிதாபாத் மாவட்டத்தில் மாநில ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் மற்றும் தேசிய மகளிா் ஆணையக் குழ... மேலும் பார்க்க

சா்வதேச சூழலைக் கண்காணித்து கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்தம்: ரிசா்வ் வங்கி ஆளுநா்

‘அமெரிக்கா-சீனா வா்த்தகப் போா் போன்ற வேகமாக மாறிவரும் உலகளாவிய சூழலை இந்திய ரிசா்வ் வங்கி விழிப்புடன் கண்காணித்து, கொள்கை நடவடிக்கைகளில் சீா்திருத்ததுடன் தொடா்ந்து முன்னோக்கிச் செல்லும்’ என்று ரிசா்வ்... மேலும் பார்க்க

அமெரிக்கா, பெரு நாடுகளுக்கு நிா்மலா சீதாராமன் 11 நாள்கள் பயணம்!

அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடான பெருவுக்கு 11 நாள் அரசுமுறைப் பயணமாக சனிக்கிழமை இரவு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புறப்பட்டாா். பயணத்தின்போது ஜி20, சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மற்று... மேலும் பார்க்க