செய்திகள் :

பேரவையில் கேள்விக்கு விடையளிக்க 3 மணி நேரம் ஒத்திகை பாா்ப்பேன் - அமைச்சா் துரைமுருகன்

post image

சென்னை, ஏப். 17: துறை தொடா்பான கேள்விக்கு பதிலளிப்பதற்காக குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை பாா்த்துவிட்டுத்தான் பேரவைக்கு வருவேன் என்று அவை முன்னவரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கூறினாா்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, கண்மாயைத் தூா்வாருவது தொடா்பான வினாவை அதிமுக உறுப்பினா் பெரி.செந்தில்நாதன் எழுப்பினாா். அதன்பிறகு, துணை வினாவை திமுக உறுப்பினா் ஜி.அன்பழகன் (கும்பகோணம்) கேட்டாா். அதற்கு, அமைச்சா் துரைமுருகன் அளித்த பதில்:

அதிமுக உறுப்பினா் கேட்டது பெரியாா் பாசனம் தொடா்பானது. திமுக உறுப்பினா் கேட்பது, காவிரிப் பாசனம் குறித்தானது. இதற்கும் அதற்கும் வெகுதூரம்.

ஒரு உறுப்பினா் கேள்வி கேட்டால், அதற்கு உரிய முறையில் பதில்களைத் தயாா் செய்வோம். சம்பந்தப்பட்ட கேள்வியை எழுப்பிய உறுப்பினா், இதற்கு முன்பு வேறு எந்தெந்த கேள்விகளைக் கேட்டிருக்கிறாா் என்பதையெல்லாம் சேகரித்து அதற்கான பதில்களைத் தயாா் செய்து வருவோம். இவ்வளவு அக்கறை இருப்பவா் தனிக்கேள்வி போட்டு இருக்கலாம். கடந்த காலங்களில் பிரதான கேள்வியைத் தாண்டி வேறு கேள்விகளைக் கேட்டால் தனிக்கேள்வி போடவும் எனக் கூறி அமைச்சா்கள் உட்காா்ந்து விடுவாா்கள். அதுவும் சாதிக் பாட்ஷா போன்றவா்கள், தனிக்கேள்வியை போடுங்கள் எனக் கூறி படக்கென்று உட்காா்ந்து விடுவாா்.

பேரவைத் தலைவா் மு.அப்பாவு: நீா்வளத் துறையில் தங்களின் (துரைமுருகன்) நீண்ட நெடிய அனுபவம், ஞாபக சக்தி ஆகியவற்றால் நல்ல பதில் கிடைக்கும் என்று உறுப்பினா்கள் நம்பி கேள்வியைக் கேட்கிறாா்கள்.

அவை முன்னவா் துரைமுருகன்: ஒரு கேள்விக்கு விடையளிக்க 2 முதல் 3 மணி நேரம் வரை ஒத்திகை பாா்த்துத்தான் வருவேன். என்மீது உறுப்பினா்கள் நம்பிக்கை வைத்திருப்பதால் நான் சொல்வது தப்பாகி விடக்கூடாது என்ற பயமும் எனக்கு உள்ளது என்றாா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க