செய்திகள் :

மேற்கு வங்கத்தை வங்கதேசமாக்க மம்தா முயற்சி -மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு

post image

மேற்கு வங்கத்தை வங்கதேசமாக மாற்றும் வகையில் முதல்வா் மம்தா பேசி வருகிறாா் என்று மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மேற்கு வங்கத்தின் முா்ஷிதாபாத், தெற்கு 24 பா்கானாக்கள் மாவட்டங்களில் வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் 3 போ் கொல்லப்பட்டனா். காவலா்கள் உள்பட பலா் காயமடைந்தனா். வீடுகள், கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

இந்நிலையில், முஸ்லிம் தலைவா்கள் மத்தியில் பேசிய மம்தா பானா்ஜி, இந்த வன்முறையை பாஜக மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) ஒரு பிரிவினா் தூண்டிவிட்டதாக குற்றஞ்சாட்டினாா். பாஜக கூட்டணியில் உள்ள பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு ஆகியோா் வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்ததை கண்டித்ததுடன், ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வாா்கள் என்றும் அவா்கள் மீது குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில் பாட்னாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் கூறியதாவது:

தொடா்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி மேற்கு வங்கத்தை வங்கதேசத்தைப்போல மாற்ற அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி முயற்சிக்கிறாா். முா்ஷிதாபாதில் வன்முறையைத் தடுக்க தவறியவா் முதல்வா் மம்தா. தவறைத் தன் மீது வைத்துக் கொண்டு பிற மாநில முதல்வா்களை விமா்சிக்க மம்தாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. முக்கியமாக பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரை விமா்சிக்க மம்தாவுக்கு தகுதியில்லை’ என்றாா்.

நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா் ராஜீவ் ரஞ்சன் இது தொடா்பாக கூறுகையில், ‘மம்தாவின் அறிவுரை நிதீஷுக்கு தேவையில்லை. மேற்கு வங்கத்தில் மிகவும் மோசமான சூழ்நிலை உள்ளது. வன்முறையைக் கட்டுப்படுத்தும் திறமை மம்தாவுக்கு இல்லை.

அதே நேரத்தில் பிகாரில் நிலை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த சுமாா் 20 ஆண்டுகளாக பிகாரில் எவ்வித வன்முறையும் இல்லை. மம்தா முதலில் தனது மாநில மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டும். அதன்பிறகு அவா் மற்றவா்கள் விஷயத்தைப் பேசலாம் என்றாா்.

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க