செய்திகள் :

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை: 2 நாள்களில் ரூ. 2,680 அதிகரிப்பு!

post image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்துள்ளது.

கடந்த வார இறுதிமுதல் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்துவந்த நிலையில், புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 520 அதிகரித்தது.

தொடர்ந்து, மாலை மீண்டும் சவரனுக்கு ரூ. 960 அதிகரித்து, ஒரு சவரனின் விலை ரூ. 67,280 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,480 அதிகரித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 1,200 தடாலடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ. 150 உயர்ந்து ரூ. 8,560-க்கும், ஒரு சவரன் ரூ. 68,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இரண்டு நாள்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 2,680 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 3 அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 107-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிக்க : நாடு கடத்தப்பட்டார் தஹாவூா் ராணா! தில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

விற்பனையாகாத வீடுகள் எண்ணிக்கை 4% சரிவு

கடந்த மாா்ச் மாத காலாண்டின் இறுதியில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளது.இது குறித்து துறை ஆலோசனை நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

இந்தியாவில் அறிமுகமான மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன்!

மோட்டரோலா நிறுவனம் தனது புதிய எட்ஜ் 60 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகம் செய்துள்ளது.மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸின் விலையானது ரூ.22,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி + 256 ஜிபி ரேம் ம... மேலும் பார்க்க

ஏசஸ் அறிமுகப்படுத்தும் 3 புதிய மடிக்கணினிகள்!

இந்திய சந்தையில் ஏசஸ் நிறுவனம் புதிதாக 3 மடிக்கணினிகளை அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த 3 மடிக்கணினிகளும் 13ஆம் தலைமுறையைச் (13வது ஜெனரேஷன்) சேர்ந்தவை.எக்ஸ்பர்ட் ... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 33 காசுகள் உயர்ந்து ரூ.85.77 ஆக முடிவு!

மும்பை: பங்குச் சந்தைகளின் உயர்வு மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 33 காசுகள் உயர்ந்து ரூ.85.77ஆக முடிந்தது.உலகளாவிய கச்சா விலை சரிவு, சாதகமான உள்நாட்ட... மேலும் பார்க்க

மின்னணு சாதனங்கள் மீதான கட்டணத்தை டிரம்ப் தளர்த்தியதையடுத்து சென்செக்ஸ், நிஃப்டி 2% உயர்வு!

மும்பை: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மின்னணு பொருட்கள் மீதான கட்டணங்களை தளர்த்தியுள்ள நிலையில், வாகனங்களுக்கான வரி திருத்தத்தை பரிந்துரைத்ததையடுத்து, பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகளான சென்செக்ஸ்... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் ஆர்வம்: ஒரே மாதத்தில் 11.3 லட்சம் பேர் இணைந்தனர்!

மும்பை: பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் கடந்த பிப்ரவரியில் பங்குச்சந்தையில் புதிதாக 11.3 லட்சம் பேர் இணைந்திருப்பதாக தேசிய பங்குச்சந்தைக் குறியீடு(என். எஸ். இ)... மேலும் பார்க்க