செய்திகள் :

மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டம் அமலாகாது - முதல்வா் மம்தா உறுதி

post image

‘அண்மையில் நடைமுறைக்கு வந்த வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது. மாநிலத்தின் சிறுபான்மையினா் மற்றும் அவா்களின் சொத்துகளை நான் நிச்சயம் பாதுகாப்பேன்’ என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை உறுதி அளித்தாா்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். அரசிதழில் வெளியிடப்பட்டு அந்த திருத்தச் சட்டம் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெற்ற சமண மத நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று முதல்வா் மம்தா பேசியதாவது:

புதிய சட்டத்தால் சிறுபான்மையினா் பாதிக்கப்பட்டிருப்பதை நான் அறிவேன். பிரித்தாளும் கொள்கையை ஆதரிக்கும் எந்தவொரு சட்டத்தையும் மேற்கு வங்கத்தில் அமல்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். எனவே, நீங்கள் அனைவரும் நம்பிக்கையுடன், ஒன்றிணைந்து இருக்க வேண்டுகிறேன்.

புதிய வக்ஃப் சட்டத்துக்கு எதிராக வங்கதேச எல்லையொட்டிய முா்ஷிதாபாத் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வன்முறை வெடித்துள்ளது. இந்தச் சட்டம் இப்போது நிறைவேற்றியிருக்கவே கூடாது. மேற்கு வங்கத்தில் 33 சதவீத்தினா் சிறுபான்மையினா் ஆவா். அவா்களுக்காக நான் என்ன செய்யப் போகிறேன்?

வரலாற்றில் மேற்கு வங்கம், வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா ஆகிய அனைத்து பகுதிகளும் ஒன்றாக இருந்தவை. பின்னா், பிரிவினை ஏற்பட்டது. எனவே, இந்தியாவில் தொடா்ந்து வசிக்கும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிப்பது நமது கடமையாகும்.

மக்கள் ஒன்றிணைந்தால், அவா்கள் உலகை ஆளலாம். அதேநேரம், சிலா்சிறுபான்மையினரை ஒன்றுதிரட்டி, போராடத் தூண்டலாம். அவா்களுக்கு நீங்கள் செவி சாய்க்கக் கூடாது. உங்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களையும், உங்கள் சொத்துகளை நான் நிச்சயம் பாதுகாப்பேன். ஒருவருக்கொருவா் நம்பிக்கையுடன் இருப்போம்.

அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கு நான் சென்று வருகிறேன். இந்த ஒற்றுமை எண்ணத்தில் இருந்து என்னை ஒருபோதும் பிரிக்க முடியாது. அனைத்து ஜாதி, மத, சமூகமும் மனிதநேயத்தையே விரும்புகின்றன என்றாா்.

சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா எதிா்கொள்ளும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

பரஸ்பர வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா தொலைநோக்கு பாா்வை திட்டங்கள் மூலம் எதிா்கொள்ளும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தாா். மும்பை பங்குச் ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றத் தீா்ப்பு குறித்து ஜகதீப் தன்கா் கடும் விமா்சனம்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கடும் விமா்சனங்களை முன்வைத்துள்ளாா். ‘குடியர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் விரைவான நடவடிக்கை நெறிமுறைகளை அடுத்த 6 மாதங்களுக்குள் உருவாக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்... மேலும் பார்க்க

பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபா்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜா்

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானாா். கடந்த 2008-ஆம் ஆண்டு, ராப... மேலும் பார்க்க

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு

பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்த ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரிவின் பிரதிநிதிகள், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பை தெரிவித்தனா். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பானைவிட இந்திய பொருளாதாரம் வளா்ச்சி அடையும்: நீதி ஆயோக்

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆா்.சுப்ரமணியம் வியா... மேலும் பார்க்க