செய்திகள் :

Trump tariffs: ``சீன அதிபர் புத்திசாலி; தன் நாட்டை அவர் நேசிக்கிறார்" - வரி விவகாரத்தில் ட்ரம்ப்

post image

அமெரிக்க அதிபரக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க பொருள்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, சீனாவுக்கு 34% வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. இதனையடுத்து ஏப்ரல் 9-ம் தேதி முதல் அனைத்து அமெரிக்க பொருள்களுக்கும் 34% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது (மொத்தம் 84% வரி).

ட்ரம்ப்
ட்ரம்ப்

இதற்கு பதிலடியாக சீனா மீது கூடுதலாக 50% வரி விதிப்பதாக அமெரிக்க ட்ரம்ப் அறிவித்தார். மேலும், சீனாவின் 34% வரியை திரும்பப் பெறவில்லையென்றால், சீனா மீது 125% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும் என எச்சரிக்கை கொடுத்திருந்தார்.

ஆனால், அமெரிக்கா மீதான 34% வரிவிதிப்பை 24 மணி நேர கெடு முடிந்தும் சீனா திரும்பப் பெறவில்லை. இந்த நிலையில், அமெரிக்கா எச்சரிக்கை விட்டதன்படி சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா நேற்று (09-04-25) காலை அறிவித்துள்ளது.

இதற்கிடையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ``சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்திசாலி மனிதர். என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாக அறிந்த ஒரு மனிதர், அவர் தனது நாட்டை நேசிக்கிறார். அதனால், இரு நாடுகளும் ஒரு நல்ல ஒப்பந்தத்தை மேற்கொள்வோம். அமெரிக்காவில் முதலீடு செய்வது மிகப்பெரிய முதலீடாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்
ஜி ஜின்பிங் மற்றும் ட்ரம்ப்

எங்களிடம் யாருக்கும் தெரியாத ஆயுதங்கள் உள்ளன. ஆனாலும் நான் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதையே விரும்புகிறேன். அது அனைவருக்கும் நியாயமாக இருக்கும். இது ஒரு பேச்சுவார்த்தைக்கான அழைப்புதான். ஆனால், நீங்கள் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

NDA : ADMK - BJP கூட்டணியில் சலசலப்பு? | Waqf : உச்ச நீதிமன்றம் அதிரடி! | Imperfect Show 17.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* `வருங்கால முதல்வரே..!' - நயினார் நகேந்திரன் போஸ்டர்களால் பரபரப்பு* கூட்டணி ஆட்சி குறித்து தேசியத் தலைமை முடிவு செய்யும்! - நயினார்* கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை! - ... மேலும் பார்க்க

'பேச்சுவார்த்தைக்குத் தயார்!' - இறங்கிவரும் சீனா; அமெரிக்கா என்ன செய்யப் போகிறது?

வரி Vs வரிஇதுதான் தற்போது அமெரிக்கா - சீனாவிற்கு இடையே நடந்துகொண்டிருக்கும் ஒன்று. தேர்தலில் வெற்றிப்பெற்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் முன்னரே, சீனா அமெரிக்காவிற்குள் போதை மருந்து கடத்தி வருகிறது... மேலும் பார்க்க

`புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மூடுவிழா’ - ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிர்ப்பு

2தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட நிறுவனம்...புதுச்சேரி லாஸ்பேட்டையில் செயல்பட்டு வரும் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது தொடர்பாக புதுச்சேரி தமிழார்வலர்கள... மேலும் பார்க்க

மேல்பாதி: சமூகப் பிரச்னையால் மூடப்பட்ட கோயில்; நீதிமன்ற உத்தரவால் திறப்பு... முழு பின்னணி!

அமைதிப் பேச்சு வார்த்தை தோல்விவிழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில். கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு கடந்த 201... மேலும் பார்க்க

`கொளுத்திடுவேன்...’ - மிரட்டிய ராணிப்பேட்டை திமுக நிர்வாகி; பறிபோன கட்சிப் பதவி; நடந்தது என்ன?

தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்தவர் எஸ்.எல்.எஸ்.தியாகராஜன். ராணிப்பேட்டை சிப்காட் மெயின் குடோனிலிருந்து, அந்த மாவட்டத்தில் இருக்கிற அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபா... மேலும் பார்க்க