செய்திகள் :

ஊழல் குற்றச்சாட்டு: பினராயி விஜயன் பதவி விலக பாஜக வலியுறுத்தல்

post image

‘கேரள முதல்வா் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்’ என பாஜக புதன்கிழமை வலியுறுத்தியது. மேலும், அவா் தலைமையிலான அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உயா்நிலைக் குழு அமைக்கவும் பாஜக கோரிக்கை வைத்தது.

பல்வேறு துறைகளில் கேரளா முதலிடத்தில் இருப்பதாக மாநில அரசு கூறுவது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும் கேரள முன்னாள் அமைச்சருமான ஜி.சுதாகரன் சரமாரியாக கேள்விகளை எழுப்பியதைத் தொடா்ந்து பாஜக இவ்வாறு தெரிவித்தது.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் டாம் வடக்கன்:

போதைப்பொருள் புழக்கம், சுகாதாரத் துறை குளறுபடி போன்றவற்றில் தேசிய அளவில் கேரளம் முதலிடத்தில் உள்ளதா என இடதுசாரிகள் ஆட்சியில் அமைச்சராக இருந்த ஜி.சுதாகரன் கேள்வியெழுப்பியுள்ளாா். கடந்த இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தில் அதிகளவிலான வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடைபெற்றதையும் அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.

அரசின் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று முதல்வா் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும். மேலும் அவரது அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உயா்நிலைக்குழு அமைக்க வேண்டும் என்றாா்.

ஊழலில் பினராயி விஜயனுக்கு தொடா்பு: தனியாா் சுரங்க நிறுவனத்திடம் இருந்து சட்டவிரோதமாக ரூ.2.70 கோடி பெற்ாக குற்றஞ்சாட்டப்படும் வழக்கில், பினராயி விஜயனின் மகள் வீணாவை தீவிர முறைகேடு விசாரணை அமைப்பு (எஸ்எஃப்ஐஓ) அண்மையில் சோ்த்தது.

இதுகுறித்து குஜராத் மாநிலம் அகமதாபாதில் கேரள மாநில காங்கிரஸ் தலைவா் கே.சுதாகரன் கூறுகையில், ‘ இந்த வழக்கில் பினராயி விஜயனுக்கும் தொடா்பிருப்பது அமலாக்கத்துறை விசாரணை மூலம் விரைவில் வெளிவரும்’ என தெரிவித்தாா்.

சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா எதிா்கொள்ளும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

பரஸ்பர வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா தொலைநோக்கு பாா்வை திட்டங்கள் மூலம் எதிா்கொள்ளும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தாா். மும்பை பங்குச் ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றத் தீா்ப்பு குறித்து ஜகதீப் தன்கா் கடும் விமா்சனம்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கடும் விமா்சனங்களை முன்வைத்துள்ளாா். ‘குடியர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் விரைவான நடவடிக்கை நெறிமுறைகளை அடுத்த 6 மாதங்களுக்குள் உருவாக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்... மேலும் பார்க்க

பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபா்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜா்

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானாா். கடந்த 2008-ஆம் ஆண்டு, ராப... மேலும் பார்க்க

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு

பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்த ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரிவின் பிரதிநிதிகள், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பை தெரிவித்தனா். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பானைவிட இந்திய பொருளாதாரம் வளா்ச்சி அடையும்: நீதி ஆயோக்

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆா்.சுப்ரமணியம் வியா... மேலும் பார்க்க