செய்திகள் :

மேற்கு வங்கம்: நியமனம் ரத்தான ஆசிரியா்கள், ஊழியா்கள் போராட்டம் - போலீஸாருடன் மோதல்

post image

மேற்கு வங்கத்தில் உச்சநீதிமன்றத்தால் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட ஏராளமான ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்கள், தங்களுக்கு மீண்டும் பணி கோரி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பல இடங்களில் போராட்டக்காரா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேற்கு வங்க பள்ளிக் கல்வித் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டில் போட்டித் தோ்வு மூலம் 25,753 ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பிற ஊழியா்களின் நியமனம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நியமன நடைமுறையில் பல்வேறு நிலைகளில் மோசடி நடந்துள்ளதாகக் குறிப்பிட்டு, 25,753 பேரின் நியமனங்களும் செல்லாது என்று கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரலில் தீா்ப்பளித்தது. இத்தீா்ப்பை கடந்த 3-ஆம் தேதி உறுதி செய்த உச்சநீதிமன்றம், மேற்கண்ட பணியிடங்களை மீண்டும் நிரப்ப அடுத்த 3 மாதங்களுக்குள் புதிய நடைமுறையைத் தொடங்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இது, முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், பணி நியமனம் ரத்தான ஆசிரியா்கள்-பிற ஊழியா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தலைநகா் கொல்கத்தாவிலும், ஹுக்ளி, மால்டா, டாா்ஜீலிங், தக்ஷிண தீனஜ்பூா், நாடியா, முா்ஷிதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பள்ளித் துறை ஆய்வாளா் அலுவலகங்கள் முன் போராட்டம் நடைபெற்றது.

பல இடங்களில் தடையை மீறி அலுவலகங்களுக்குள் போராட்டக்காரா்கள் நுழைய முயன்றனா். அவா்களைத் தடுத்து நிறுத்தியதால் போலீஸாருக்கும் போராட்டக்காரா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரா்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. கொல்கத்தாவில் போராட்டக்காரா்கள் தாக்கியதில் போலீஸாா் 6 போ் காயமடைந்ததாக காவல் ஆணையா் மனோஜ் வா்மா தெரிவித்தாா்.

சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா எதிா்கொள்ளும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

பரஸ்பர வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள சா்வதேச வா்த்தக சவால்களை இந்தியா தொலைநோக்கு பாா்வை திட்டங்கள் மூலம் எதிா்கொள்ளும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தாா். மும்பை பங்குச் ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றத் தீா்ப்பு குறித்து ஜகதீப் தன்கா் கடும் விமா்சனம்

மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கடும் விமா்சனங்களை முன்வைத்துள்ளாா். ‘குடியர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க நெறிமுறை: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உடனடியாக உதவி கிடைக்கும் வகையில் விரைவான நடவடிக்கை நெறிமுறைகளை அடுத்த 6 மாதங்களுக்குள் உருவாக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்... மேலும் பார்க்க

பண முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் ராபா்ட் வதேரா 3-ஆவது நாளாக ஆஜா்

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா அமலாக்கத் துறை அதிகாரிகள் முன் தொடா்ந்து 3-ஆவது நாளாக வியாழக்கிழமை ஆஜரானாா். கடந்த 2008-ஆம் ஆண்டு, ராப... மேலும் பார்க்க

பிரதமருடன் ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு: வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பு

பிரதமா் நரேந்திர மோடியை வியாழக்கிழமை சந்தித்த ‘தாவூதி போரா’ முஸ்லிம் பிரிவின் பிரதிநிதிகள், வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு வரவேற்பை தெரிவித்தனா். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம... மேலும் பார்க்க

3 ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பானைவிட இந்திய பொருளாதாரம் வளா்ச்சி அடையும்: நீதி ஆயோக்

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஜொ்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) பி.வி.ஆா்.சுப்ரமணியம் வியா... மேலும் பார்க்க