செய்திகள் :

சூலூரில் கழிவுப் பஞ்சு குடோனில் தீ விபத்து: 70 லட்சம் ரூபாய் சேதம்

post image

சூலூர்: கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் பஞ்சு குடோனில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

கோவை எஸ்.ஐ.எச்.எஸ். காலனியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான கழிவுப் பஞ்சு குடோன் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பகுதியில் கலங்கல் சாலையில் உள்ளது.

இங்கு கடந்த இரண்டு நாள்களுக்கு முன் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டு, தீயணைப்புத் துறையினரால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் திடீரென மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்களும் அருகில் இருந்தவர்களும் தீயை அணைக்க முயன்ற போதிலும், பலமாக வீசிய காற்றால் தீ வேகமாகப் பரவியது.

தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்.

கடற்படையில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கு மருத்துவ உதவியாளர் பணி

தகவலறிந்து வந்த சூலூர், கருமத்தம்பட்டி, பீளமேடு ஆகிய இடங்களிலிருந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் தீயை அணைக்க கடுமையாகப் போராடி வருகின்றன.

இருப்பினும் ரூ.1 கோடிக்கு மேல் மதிப்புள்ள கழிவுப் பஞ்சு, ரூ.20 லட்சம் மதிப்பிலான பஞ்சு பிரிப்பு இயந்திரங்கள் மற்றும் குடோன் கட்டடம் முற்றிலும் எரிந்து நாசமாயின. மெத்தை, தலையணை தயாரிப்புக்கு பயன்படும் இந்தப் பஞ்சுகளால் ஏற்பட்ட சேதம் ரூ. 70 லட்சத்தைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குடோனில் 75 டன் கழிவுப் பஞ்சு சேமிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

முந்தைய தீ விபத்தின் சேதத்தை காப்பீடு நிறுவனம் ஆய்வு செய்யவிருந்த நிலையில் இந்தப் புதிய தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து குறித்து சூலூர் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

உரத்தொழிற்சாலையில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

மீண்டும், மீண்டும்... அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கனிணிமையத்திற்கு ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: திட்டமிட்டபடி நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம்! - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திட்டமிட்டபடி தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக தில்லியில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் கைது!

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு தில்லியின் காட்வாரியா சாராய் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வந்த பாபியா காத்தூன் (வயது 3... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் தில்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென இன்று(வியாழக்கிழமை) தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்... மேலும் பார்க்க

ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!

ஈரான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் அவர்களது தாயகம் கொண்டு செல்லப்பட்டது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 8 பேர் ஈரானின் சிஸ்தான் மாகாணத்தின் மெஹ்ர்ஸ்தான் மாவட்டத்த... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே பழமை வாய்ந்த சிவன் கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்

வாணியம்பாடி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பிரஹன்நாயகி சமேத அதிதீஸ்வரர் சிவன் ஆலயத்தில் இசையமைப்பாளா் இளையராஜா வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பழைய... மேலும் பார்க்க