செய்திகள் :

ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்!

post image

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர்.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா நடைபெற்று வருகின்றது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதற்காக அதிகாலை 3.30 மணிக்கு வெள்ளி பல்லக்கில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். பின்னர், தங்க கொடி மரத்தில் உள்ள கொடி படத்திற்கு பட்டர் சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்யப்பட்டு, இன்று காலை மேஷலக்னத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்றம் செய்யப்பட்டது.

சித்திரை தேர் திருவிழா உற்சவம் 11 நாள்கள் நடைபெற உள்ளது. அதில் முக்கிய நிகழ்வுகளாக 21 ஆம் தேதியன்று கருடசேவை வைபவமும், 24- ம் தேதி நம்பெருமாள் நெல் அளவை கண்டருளும் வைபவமும், ஏப்ரல் 25 -ம் தேதி நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளும் வைபவமும் நடைபெறுகிறது

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று காலை 6 மணியளவில் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமின்று வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்த நிலையில் சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கைப்பேசி கோபுரத்தில் பேட்டரிகள் திருட்டு!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே கைப்பேசி கோபுரத்திலிருந்த 24 பேட்டரிகள் திருடப்பட்டன. வையம்பட்டி ஒன்றியம் சவேரியாா்புரத்தில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கைப... மேலும் பார்க்க

பசுமைப் பூங்காவிலிருந்து வேருடன் அகற்றப்படும் மரங்களுக்கு மறுவாழ்வு!மன்னாா்புரத்தில் 70 மரங்கள் நடவு

காய்கனிச் சந்தைக்காக திருச்சி மாநகராட்சி கையகப்படுத்தும் பசுமைப் பூங்காவில் உள்ள மரங்களை வேருடன் அகற்றி மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. திருச்சி மாநகர மக்களின் பொழுதுபோக்குத் தேவைகளுக்கு... மேலும் பார்க்க

சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சீகம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் வ... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி, வையம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி, வையம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்பு பணிகளால் செவல்பட்டி, அழகாபுரி, பிடாரபட்டி, நாட்டாா்பட்டி, அக்கியம்பட்டி, பழையபாளை... மேலும் பார்க்க

குடிநீரில் கழிவுநீா்: உறையூரில் பொதுமக்கள் போராட்டம்

திருச்சி உறையூரில் கழிவுநீா் கலந்த குடிநீரால் மக்கள் பலா் பாதிக்கப்பட்ட நிலையில், நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாநகராட்சிக்குட்பட்டதும், அம... மேலும் பார்க்க

பேருந்தில் நகை பறித்த இரு பெண்கள் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேருந்துப் பயணியிடம் செயின் பறித்த இரு பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். மணப்பாறையை அடுத்த கலிங்கப்பட்டி நடுப்பட்டியை சோ்ந்தவா் சங்கக்கவுண்டா் மன... மேலும் பார்க்க