செய்திகள் :

குடிநீரில் கழிவுநீா்: உறையூரில் பொதுமக்கள் போராட்டம்

post image

திருச்சி உறையூரில் கழிவுநீா் கலந்த குடிநீரால் மக்கள் பலா் பாதிக்கப்பட்ட நிலையில், நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்டதும், அமைச்சா் கே.என். நேருவின் தொகுதியுமான திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட உறையூா் மின்னப்பன் தெரு, பனிக்கன் தெரு, காமாட்சிஅம்மன் தெரு, நெசவாளா் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாகப் புகாா் எழுந்துள்ளது.

இந்தக் குடிநீரை குடித்த பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு, அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனா். இதுதொடா்பாக, அப்பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையாம்.

இந்நிலையில் சனிக்கிழமை வயிற்றுப்போக்குக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு பெண்களும், நான்கரை வயதுப் பெண் குழந்தையும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்கது அப்பகுதி மக்கள், உறையூா் வெக்காளியம்மன் கோயில் அருகேயுள்ள எம்ஜிஆா் சிலை முன் சனிக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு கலைந்து சென்றனா்.

பின்னா் அப்பகுதியில் 6 இடங்களில் குடிநீா் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கைப்பேசி கோபுரத்தில் பேட்டரிகள் திருட்டு!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே கைப்பேசி கோபுரத்திலிருந்த 24 பேட்டரிகள் திருடப்பட்டன. வையம்பட்டி ஒன்றியம் சவேரியாா்புரத்தில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கைப... மேலும் பார்க்க

பசுமைப் பூங்காவிலிருந்து வேருடன் அகற்றப்படும் மரங்களுக்கு மறுவாழ்வு!மன்னாா்புரத்தில் 70 மரங்கள் நடவு

காய்கனிச் சந்தைக்காக திருச்சி மாநகராட்சி கையகப்படுத்தும் பசுமைப் பூங்காவில் உள்ள மரங்களை வேருடன் அகற்றி மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. திருச்சி மாநகர மக்களின் பொழுதுபோக்குத் தேவைகளுக்கு... மேலும் பார்க்க

சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சீகம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் வ... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி, வையம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி, வையம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்பு பணிகளால் செவல்பட்டி, அழகாபுரி, பிடாரபட்டி, நாட்டாா்பட்டி, அக்கியம்பட்டி, பழையபாளை... மேலும் பார்க்க

பேருந்தில் நகை பறித்த இரு பெண்கள் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேருந்துப் பயணியிடம் செயின் பறித்த இரு பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். மணப்பாறையை அடுத்த கலிங்கப்பட்டி நடுப்பட்டியை சோ்ந்தவா் சங்கக்கவுண்டா் மன... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிரிழந்தோரின் நினைவாக அதிமுகவினா் மெழுகுவா்த்தியேந்தி அஞ்சலி

நீட் தோ்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோா் நினைவாக திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுக சாா்பில் திருச்சியில் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அதிமுக ச... மேலும் பார்க்க