செய்திகள் :

சட்டவிரோதமாக தில்லியில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் கைது!

post image

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு தில்லியின் காட்வாரியா சாராய் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வந்த பாபியா காத்தூன் (வயது 36) மற்றும் அவரது மகளும் ஒப்பனைக் கலைஞருமான சதியா சுல்தானா (21) ஆகிய இருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், பாபியா காத்தூனின் வங்கதேசத்தைச் சேர்ந்த கணவர் பிரிந்து சென்றதினால், கோஜா தொங்கா எல்லையின் வழியாகக் கடந்த 2007-ம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவினுள் குடியேறியுள்ளார். பின்னர், தில்லியிலுள்ள வீடுகளில் பணியாளர்களாக வேலை செய்து வந்த அவர், தனது மகளை ஒப்பனைக் கலைஞருக்காக பயிற்சிப் பெற வைத்துள்ளார்.

இதேபோல், காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சதியா நிகேதன் சந்தை மற்றும் மோதி பாக் ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, ரபியுல் இஸ்லாம் (38) என்ற நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கடந்த 2012-ம் ஆண்டு சட்டவிரோதமாக தில்லியில் குடியேறியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

பின்னர், கடந்த 2016-ல் திரிபுரா எல்லை வழியாக நுழைந்த அவரது மனைவியான சீமா மற்றும் அவர்களது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், 2023-ல் தரகர் மூலமாக கத்வாரியா சராய் பகுதியில் குடியேறிய ரிஃபாத் அரா மொய்னா என்ற வங்கதேசப் பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரையும் நேற்று (ஏப்.17) வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகத்தில் தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட அதிகாரிகள் ஆஜர் படுத்தினர்.

வங்கதேசத்திலிருந்து தில்லியில் சட்டவிரோதமாக குடியேறும் அந்நாட்டு மக்கள் பெரும்பாலும் அம்மாநிலத்தின் சத்யா நிகேதன், கிஷங்கார் மற்றும் கட்வாரியா சராய் ஆகிய பகுதிகளில் வசித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிக்க:பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் சேவை தொடங்கியது

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே குளிர்சாதன(ஏசி) வசதி கொண்ட புறநகர் மின்சார ரயில் ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கியது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில் தொலைதூரம் ச... மேலும் பார்க்க

ஹேக் செய்யப்பட்ட குஷ்புவின் எக்ஸ் தளப் பக்கம்!

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் எக்ஸ் தளப் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தனது எக்ஸ் கணக்கில் ஹேக்கர்கள் மின்னஞ்சல் முகவரியை மாற்றியுள்ளதாகவும் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும் குஷ்பு கூறி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஸ்வாத் மாவட்... மேலும் பார்க்க

முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது கருப்புச் சாயம் பூச்சு!

உத்தரப் பிரதேசத்தின் ரயில் நிலையத்திலுள்ள முகலாய மன்னரின் சுவரோவியத்தின் மீது இந்து வலதுசாரி அமைப்பினர் கருப்புச் சாயம் பூசியுள்ளனர். காசியாபாத் ரயில் நிலையத்தில் வரையப்பட்டிருந்த முகாலாப் பேரரசின் கட... மேலும் பார்க்க

நேபாளம்: சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயம்!

நேபாளத்தில் சுற்றுலாப் பேருந்து விபத்தில் 21 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் லக்னௌ மாவட்டத்தைச் சேர்ந்த பேருந்தின் மூலம் நேபாளத்தின் பிரபல சுற்றுலாத் தளமான போகராவிற்கு 25-க்கும் ... மேலும் பார்க்க

வாகன விபத்தில் 9 ஒட்டகங்கள் பலி! நெடுஞ்சாலையை முடக்கிய கிராமவாசிகள்!

ராஜஸ்தானின் பலோடி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் 9 ஒட்டகங்கள் பலியானதினால் கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலோடியின் போஜஸார் பகுதியில் பரத்மாலா நெடுஞ்சாலையில் நேற்ற... மேலும் பார்க்க