செய்திகள் :

9 மாத ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது: இபிஎஸ்

post image

9 மாத ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் ஊழல் நடைபெறுவதைக் குறிக்கும் வகையில், அந்த தியாகி யார் என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் இன்று டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், அவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

திடீரென அவர்களை கையில் வைத்திருந்த பதாகைகைளை காட்டியதால், அவைக் காவலர்கள் மூலம் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து வெளியேறினர். இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசுகையில், “டாஸ்மாக் வழக்கு தொடர்பாக பேச பேரவைத் தலைவர் அனுமதி வழங்கவில்லை. டாஸ்மாக் தொடர்பான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறுவது தவறு நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.

தமிழகத்தில் இவ்வழக்கை விசாரணை செய்தால், இவர்கள் செய்த தவறுகள் தொலைக்காசி வாயிலாக மக்களுக்கு சென்றடையும். அதை மறைப்பதற்கு இதுபோன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.

ஸ்டாலின் ஆட்சியில் மாணவர்கள், மீனவர்கள், மக்கள் என அனைவரும் சொந்து நூலாய் போயிருக்கிறார்கள். இன்று மீனவர்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.

4 ஆண்டுகாலம் மீனவர்கள் படும் துன்பம் இவருக்குத் தெரியாதா? 9 மாத ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது, அனைத்தும் வெற்று அறிவிப்புகளாகவே இருக்கும்.” என்றார்.

இதையும் படிக்க: தியாகி யார்? நொந்து நூடுல்ஸான அதிமுகவினர்தான்: பேரவையில் ஸ்டாலின் பதில்

அமைச்சர் நேருவின் சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமச்சந்திரன் வீடு, அலுவலகங்களில் 3 நாள்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமச்சந்திரன் ம... மேலும் பார்க்க

மருதமலை அடிவாரத்தில் வெள்ளிவேல் திருடியவர் கைது!

கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அடிவாரத்தில் உள்ள தியான மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளிவேலை திருடியவரை காவல்துறையினர் கைது செய்யதுள்ளனர்.கோவை மாவட்டம், மருதமலை அருள்மிகு ... மேலும் பார்க்க

உதிா்ந்தது இலக்கிய ரோஜா!

அரசியல் வானில் பூத்துக் குலுங்கிய இலக்கிய ரோஜா உதிா்ந்தது. ஆம், காமராஜரின் பெருந்தொண்டன் குமரி அனந்தன் (93)) மறைந்தாா். கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் 1933, மாா்ச் 19-இல் சுதந்திரப் போராட்ட த... மேலும் பார்க்க

புயல் சின்னம் இன்று வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா தெரிவித்தாா். இது க... மேலும் பார்க்க

6 லட்சம் மாணவா்களை தொழில்முனைவோராக்க ‘நிமிா்ந்து நில்’ திட்டம்: சட்டப் பேரவையில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

தமிழகத்தில் 2,000 கல்வி நிறுவனங்களில் பயிலும் 6 லட்சம் மாணவா்களுக்கு புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு பயிற்சி வழங்கும் நோக்கில் ‘நிமிா்ந்து நில்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் கு... மேலும் பார்க்க

திருப்பதி-காட்பாடி இடையே ரூ.1,332 கோடியில் இரட்டை ரயில்பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஆந்திரம் மற்றும் தமிழ்நாட்டில் ரூ.1,332 கோடி மதிப்பில் 104 கி.மீ. தொலைவுடைய திருப்பதி-பாகலா-காட்பாடி இடையேயான ஒருவழி ரயில்பாதையை இரட்டை ரயில்பாதையாக மாற்ற பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பொருளாதார விவக... மேலும் பார்க்க