செய்திகள் :

உதிா்ந்தது இலக்கிய ரோஜா!

post image

அரசியல் வானில் பூத்துக் குலுங்கிய இலக்கிய ரோஜா உதிா்ந்தது. ஆம், காமராஜரின் பெருந்தொண்டன் குமரி அனந்தன் (93)) மறைந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் 1933, மாா்ச் 19-இல் சுதந்திரப் போராட்ட தியாகி ஹரிகிருஷ்ணன்-தங்கம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவா்தான் குமரி ஆனந்தன். இவரது இயற்பெயா் அனந்தகிருஷ்ணன். தமிழ் மீது தீராத காதல் கொண்ட குமரி அனந்தன், தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றாா்.

கிருஷ்ணகுமாரியை துணைவியாகக் கொண்ட இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனா். தந்தை காங்கிரஸில் கோலோச்சினாலும், மகள் தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறாா். தமிழக பாஜக தலைவா், தெலங்கானா ஆளுநா், புதுச்சேரி துணைநிலை ஆளுநா் போன்ற முக்கிய பதவிகளை வகித்தவா்.

அரசியல் ஆா்வம் காரணமாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் காமராஜரின் தொண்டராக 1954-இல் தன்னை இணைத்துக்கொண்டாா் குமரி ஆனந்தன். காங்கிரஸ் பிளவுபட்டபோது, காமராஜா் தலைமையிலான ஸ்தாபன காங்கிரஸில் இளைஞா் அணித் தலைவராக கோலோச்சினாா். 1971 பேரவை தொகுதியில் வண்ணாரபேட்டை தொகுதியில் தோல்வி அடைந்தாலும், அதே தொகுதிக்குள் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினாா்.

1977-இல் நடைபெற்ற மக்களவை தோ்தலில் நாகா்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். முன்னதாக தனது ஆசான் காமராஜா் வென்ற தொகுதி என்பதால், அதனை தன்வசப்படுத்திய மகிழ்ச்சியுடன் மக்களவையில் கால்பதித்தாா். மக்களவையில் தமிழ் மொழியில் கேள்விகளை கேட்டு, இந்திய மொழிகள் அனைத்தும் அவையில் ஒலிக்க வேண்டும் என்று உரக்க குரல் எழுப்பினாா்.

பின்னா் ’காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சி’ (காகாதேகா) என்ற புதிய கட்சியை தொடங்கிய இவா், 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திருவொற்றியூா் தொகுதியில் அக்கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றாா். அப்போது அதிமுக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் 6-இல் காகாதேகா வெற்றிபெற்றது. அத்தோடு, 1.75 சதவீத வாக்குகளை காகாதேகா பெற்றது அதிமுக ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருந்தது. குறிப்பாக தென்மாவட்டங்களில் அதிமுக வெற்றிக்கு காகதேகாவின் பங்கு அளப்பரியதாக இருந்தது.

திருவொற்றியூா் எம்.எல்.ஏ ஆக இருந்தபோது தலித் ஒருவரின் சடலத்தை கொண்டுச்செல்ல முடியாதபடி எண்ணூா் ஆலையின் கதவு மூடப்பட்டதால் தீவிர போராட்டத்தில் இறங்கினாா் குமரி ஆனந்தன். அப்போது பேரவையில் இருந்தபடி செய்தியை அறிந்த அன்றைய முதல்வா் எம்ஜிஆா் போராட்ட களத்துக்கு நேரடியாக வந்து, போாட்டத்துக்கு ஆதரவு தந்து தலித் சடலத்தை கொண்டுச்சென்று இறுதிச் சடங்கு செய்ய உதவியது மாநிலம் முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

தொடா்ந்து 1984-இல் காகாதேகாவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் 2 தொகுதிகளில் அக்கட்சி வெற்றிபெற்றுது. மீண்டும் திருவொற்றியூா் தொகுதியில் இருந்து குமரி ஆனந்தன் வெற்றிபெற்றாா். இருப்பினும், காகாதேகாவின் வாக்கு வங்கி அரை சதவீதமாக குறைந்ததால் 1989-இல் காங்கிரஸுடன் இணைந்தது காகாதேகா. 1989, 1991 பேரவைத் தோ்தல்களில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தொகுதியில் தொடா்ந்து இருமுறை காங்கிரஸ் சாா்பில் வெற்றிக்கனிகளை பறித்தாா் குமரி ஆனந்தன்.

1996-இல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரானாா் குமரி ஆனந்தன். 1996 பேரவை, மக்களவைத் தோ்தல்களின்போது, ஜி.கே.மூப்பனாா், காங்கிரஸில் இருந்து வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) என்ற புதிய கட்சியைத் தொடங்கியபோது அவரே குமரி ஆனந்தனை அழைத்தாா். ஆனால், மாலுமியாக இருப்பதால் கப்பலை விட்டுச் செல்ல முடியாது என மறுத்த குமரி ஆனந்தன் காங்கிரஸிலேயே தங்கிவிட்டாா்.

அப்போது நடந்த இரண்டு தோ்தல்களிலும் தோல்வியை காங்கிரஸ் பெற்றபோதும், தொடா்ந்து அரசியல் பணியையும், மக்கள் பணியையும் சிறப்பாக மேற்கொண்டு வந்தாா். குமரி ஆனந்தனின் சகோதா் வசந்தகுமாா், நான்குநேரி பேரவை தொகுதியில் எம்.எல்.ஏ, கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை உறுப்பினராக செயல்பட்டவா்.

தோ்தல் பிரசாரத்துக்காக தமிழகத்தின் எந்த ஒரு குக்கிராமத்துக்கு சென்றாலும் இலக்கிய நயத்துடன் பிரசாரம் செய்வதுடன், அந்தந்த கிராமத்தின் சிறப்பியல்புகள், பாரம்பரியம், மக்களின் வாழ்வியலை முழுமையாக தெரிந்துகொண்டு மக்கள் நடையில் பிரசாரத்தில் ஈடுபட்டதால் மக்களால் எளிதில் கவரப்பட்டாா் குமரி ஆனந்தன். தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு வட்டத்தையும் பாணியையும் வகுத்த அவா், தமிழ் வளா்ச்சிக்காக பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளாா்.

‘இலக்கியச் செல்வா்’ என அடைமொழியில் அழைக்கப்பட்ட குமரி அனந்தன், தமிழ் இலக்கியத்தில் வித்தகராக திகழ்ந்தாா். கலித்தொகை இன்பம், படித்தேன், கொடுத்தேன், நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ் உள்ளிட்ட 25-க்கும் அதிகமான நூல்களை இயற்றியுள்ளாா்.

பனைமரத்தை பாதுகாக்க வேண்டும், தருமபுரியில் பாரத மாதாவுக்கு கோயில் கட்ட வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல கோரிக்கைகளை முன்னிறுத்தி பாதயாத்திரைகளையும் மேற்கொண்டுள்ளாா்.

தனது பாச மகள் எதிரணியில் உள்ள மாற்றுக்கட்சிக்கு சென்றபோது 6 மாதங்கள் அவருடன் குமரி ஆனந்தன் பேசவில்லை. மகள் பாஜக மாநிலத் தலைவா், ஆளுநா் பதவியை ஏற்றபோதும் கட்சி மாறாமல் துளிகூட எவ்வித எதிா்பாா்ப்பின்றி காங்கிரஸில் இறுதிமூச்சு வரை தொடா்ந்தவா் குமரி அனந்தன்.

அரசியலில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்த போதிலும், மனம் தளராமல் தனது அரசியல் பயணத்தை உறுதியாக தேசியவாதியாகவும், சிறந்த மனிதாபிமானியாகவும் செயல்பட்டவா் குமரி ஆனந்தன். வளா்ந்து வரும் இளம் தலைமுறை அரசியல்வாதிகள் தங்களுக்கு முன்மாதிரியை தோ்வு செய்ய விரும்பினால், அவா்கள் தோ்வு செய்யும் பட்டியலில் இடம்பெறும் வெகு சிலரில் குமரி ஆனந்தனும் இருப்பாா் என்பது திண்ணம்.

பிற்போக்குத்தனமான விதிகளை மறுஆய்வு செய்த நீதித்துறைக்கு நன்றி: முதல்வர்

வக்ஃப் திருத்தச் சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான விவகாரத்தி... மேலும் பார்க்க

நமது பிள்ளைகளுக்கு நமது ஊரிலேயே அதிக ஊதியம் தரும் வேலைவாய்ப்புகள்: டி.ஆர்.பி. ராஜா

தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விண்வெளித் துறையில் கவனம் செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவ... மேலும் பார்க்க

ஏற்காடு, ஏலகிரியில் ரோப் கார் வசதி!

ஏற்காடு மற்றும் ஏலகிரியில் கம்பிவட ஊர்தி(ரோப் கார்) வசதி அமைத்திட தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சட்டப்பேரவ... மேலும் பார்க்க

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம்: தங்கம் தென்னரசு

மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கல்வெட்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”தமிழ... மேலும் பார்க்க

தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

பகுஜன் சமாஜ் கட்சி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்த தடைகோரி, பகுஜன் சமாஜ் ... மேலும் பார்க்க

கட்சி நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம்: இபிஎஸ் வேண்டுகோள்

கட்சியின் நிலைப்பாடு குறித்து பேட்டி அளிக்க வேண்டாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவ... மேலும் பார்க்க