செய்திகள் :

நமது பிள்ளைகளுக்கு நமது ஊரிலேயே அதிக ஊதியம் தரும் வேலைவாய்ப்புகள்: டி.ஆர்.பி. ராஜா

post image

தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விண்வெளித் துறையில் கவனம் செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டதாக வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது, பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முதல் மாநிலமாகத் திகழ்கிறது. அடுத்தக்கட்ட வளர்ச்சியாக விண்வெளித்துறையில் கவனம் செலுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

அடுத்த 5 ஆண்டுகளில், விண்வெளித் துறையில் ரூ. 10,000 கோடி முதலீட்டை ஈர்ப்பதுதான், இதன் முக்கிய மற்றும் முதன்மை இலக்கு. மேலும், 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல், விண்வெளித் துறைக்குத் தேவையான மற்றும் தகுதியானவர்களை உருவாக்குதலும் அடங்கும்.

பெரும்பாலும் உற்பத்தித் துறையில் மட்டும் கவனம் செலுத்தி வரும்நிலையில், விண்வெளித் துறையிலும் விண்வெளித்துறை சேவையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். விண்வெளித் துறையில் உலகளாவிய போட்டிக்கு முதல்வர் ஊக்கமளித்துள்ளார். ரூ. 25 கோடி மதிப்புகொண்ட சிறு ஸ்டார்ட் கம்பெனிகளும் முதலீடு செய்ய ஊக்கமளிக்கப்படுகிறது.

தற்போது செயல் நுண்ணறிவு உதவியோடு, தமிழ்நாட்டிலும்கூட ராக்கெட்டை நாம் பிரின்ட் செய்கிறோம். எலான் மஸ்க்கின் நிறுவனத்துக்கு போட்டியாக, சென்னையிலும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். நமது பிள்ளைகளுக்கு நமது ஊரிலேயே அதிக ஊதிய ம் தரக்கூடிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். மற்ற மாநிலங்களில் இதுபோன்று முன்னெடுப்பு தொடங்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:தவெக தலைவர் விஜய் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

பள்ளிக்குச் சென்றுவர தங்கள் பகுதியில் பேருந்து வேண்டும் என்ற அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிறைவேற்றியுள்ளார். அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகர் மாவட்டத்துக்குச் சென்றபோத... மேலும் பார்க்க

குரூப் 1 தோ்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி

குரூப் 1 தோ்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான தோ்வு அறிவிக்கை தோ்வாணைய இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) ... மேலும் பார்க்க

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை: தன்கா் விமா்சனம் குறித்து முதல்வா் ஸ்டாலின் கருத்து

சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு

நியாயவிலைக் கடைகளில் அனைத்துக் குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையை அனைத்து மாவட்ட, வட்ட வழங்கல் அலுவலா்கள், உணவுப் பொருள்... மேலும் பார்க்க

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: கமல்ஹாசன்

‘தக் லைஃப்’ திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகா் கமல்ஹாசன், இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம் என்றாா். இயக்குநா் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ள ‘தக் லைஃ... மேலும் பார்க்க

12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவா்களும் விமானியாக வாய்ப்பு

இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 1990-ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் ... மேலும் பார்க்க